மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் | கண்ணப்பா படப்பிடிப்பை நிறைவு செய்த அக்சய் குமார் | ஹீரோக்களுக்கு எதிராக ஹீரோக்களே வசனம் பேசும் புதிய ட்ரெண்ட் | தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் | விஜய் மகன் படத்தில் நடிக்க அழைத்தது உண்மைதான் : கவின் | திடீரென கதை சர்ச்சையை கிளப்பிய கதாசிரியருக்கு நிவின்பாலி பட தயாரிப்பாளர் கண்டனம் | வேட்டைக்காரன், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மாவீரன் - ஞாயிறு திரைப்படங்கள் |
மானாமதுரை அருகே உள்ள கந்தசாமி முருகன் கோவிலில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொண்டார் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. அப்போது சாமி தரிசனம் செய்துவிட்டு அன்னதான நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார். இதை அடுத்து மீடியாக்களை சந்தித்த கஞ்சா கருப்பு, இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது படப்பிடிப்பு இருந்ததால் என்னால் வர முடியவில்லை. அதனால் தான் இந்த மண்டல பூஜையில் கலந்து கொண்டேன்.
இதையடுத்து சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் தீச்சட்டி எடுக்க போகிறேன். அது எதற்காக என்றால், எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதை அடுத்து முதல்வராக ஆக வேண்டும் என்பதற்காகத்தான் என்று கூறியுள்ள கஞ்சா கருப்பு, கூடிய சீக்கிரமே தமிழகத்தில் அதிமுகவின் நேர்மையான நல்லாட்சி நடைபெறும். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருந்திருந்தால் கரண்ட் பில், வீட்டு வரி எல்லாம் அதிகரித்திருக்காது. அதிமுகவில் தற்போது நடப்பது அங்காளி பங்காளி சண்டை. இது விரைவில் முடிவுக்கு வந்துவிடும். அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வர் ஆவார் என்று கஞ்சா கருப்பு தெரிவித்திருக்கிறார்.