இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் |
பொதுவாக எந்த ஒரு மொழியிலும் நூற்றுக்கணக்கான படங்கள் வெளியானாலும் அதில் ஏதோ ஒரு படத்தின் மூலம் தான் வருடத்திற்கு ஒரு கதாநாயகனாவது ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவராக கிடைக்கிறார்கள். அதன் பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து அவர்கள் பிரபலம் ஆகிறார்களா இல்லையா என்கிறது தனிக்கதை. ஆனால் தற்போது வேகமாக வளர்ந்து வரும் மலையாள நடிகர் தேவ் மோகன் கதையோ கொஞ்சம் வித்தியாசமானது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான சூபியும் சுஜாதையும் என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர்தான் இந்த தேவ் மோகன். அந்த படத்தில் நடிகை அதித்தி ராவ் ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்ததை தொடர்ந்து அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதைத்தொடர்ந்து அடுத்ததாக தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ரெயின்போ என்கிற படத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தேவ் மோகன். இப்படி அடுத்தடுத்து முன்னணி ஹீரோயின்களுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் மிகக்குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெளிச்சம் பெற்றுள்ளார் தேவ் மோகன். இனி வரும் காலங்களில் போகப்போக இந்த வாய்ப்புகள் மூலம் எப்படி அவர் தன்னை வளர்த்துக் கொள்கிறார் என்பதில் தான் அவரது திரையுலக பயணத்தின் வெற்றி அமையும்.