எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
பொதுவாக எந்த ஒரு மொழியிலும் நூற்றுக்கணக்கான படங்கள் வெளியானாலும் அதில் ஏதோ ஒரு படத்தின் மூலம் தான் வருடத்திற்கு ஒரு கதாநாயகனாவது ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவராக கிடைக்கிறார்கள். அதன் பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து அவர்கள் பிரபலம் ஆகிறார்களா இல்லையா என்கிறது தனிக்கதை. ஆனால் தற்போது வேகமாக வளர்ந்து வரும் மலையாள நடிகர் தேவ் மோகன் கதையோ கொஞ்சம் வித்தியாசமானது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான சூபியும் சுஜாதையும் என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர்தான் இந்த தேவ் மோகன். அந்த படத்தில் நடிகை அதித்தி ராவ் ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்ததை தொடர்ந்து அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதைத்தொடர்ந்து அடுத்ததாக தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ரெயின்போ என்கிற படத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தேவ் மோகன். இப்படி அடுத்தடுத்து முன்னணி ஹீரோயின்களுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் மிகக்குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெளிச்சம் பெற்றுள்ளார் தேவ் மோகன். இனி வரும் காலங்களில் போகப்போக இந்த வாய்ப்புகள் மூலம் எப்படி அவர் தன்னை வளர்த்துக் கொள்கிறார் என்பதில் தான் அவரது திரையுலக பயணத்தின் வெற்றி அமையும்.