நகைச்சுவை நாயகனா? கதாநாயகனா? மக்களே கூறட்டும்; நடிகர் சூரி | ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் |
பொதுவாக எந்த ஒரு மொழியிலும் நூற்றுக்கணக்கான படங்கள் வெளியானாலும் அதில் ஏதோ ஒரு படத்தின் மூலம் தான் வருடத்திற்கு ஒரு கதாநாயகனாவது ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவராக கிடைக்கிறார்கள். அதன் பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து அவர்கள் பிரபலம் ஆகிறார்களா இல்லையா என்கிறது தனிக்கதை. ஆனால் தற்போது வேகமாக வளர்ந்து வரும் மலையாள நடிகர் தேவ் மோகன் கதையோ கொஞ்சம் வித்தியாசமானது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான சூபியும் சுஜாதையும் என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர்தான் இந்த தேவ் மோகன். அந்த படத்தில் நடிகை அதித்தி ராவ் ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்ததை தொடர்ந்து அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதைத்தொடர்ந்து அடுத்ததாக தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ரெயின்போ என்கிற படத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தேவ் மோகன். இப்படி அடுத்தடுத்து முன்னணி ஹீரோயின்களுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் மிகக்குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெளிச்சம் பெற்றுள்ளார் தேவ் மோகன். இனி வரும் காலங்களில் போகப்போக இந்த வாய்ப்புகள் மூலம் எப்படி அவர் தன்னை வளர்த்துக் கொள்கிறார் என்பதில் தான் அவரது திரையுலக பயணத்தின் வெற்றி அமையும்.