கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தெலுங்கில் இயக்கி வரும் படத்திற்குப் பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பு கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. படத்தின் கதாநாயகனாக ராம்சரண் பட எண்ணிக்கையைக் குறிப்பிடும் விதத்தில் 'ஆர்சி 15' என அழைக்கப்பட்டு வந்த படத்தின் பெயரை இன்று(மார்ச் 27) ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவித்துள்ளனர்.
'கேம் சேஞ்சர்' என படத்திற்குப் பெயர் வைத்து அதற்கான மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள். முதலில் இப்படத்திற்கு 'சிஇஓ' எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அவையனைத்தையும் பொய்யாக்கி புதிய பெயரை அறிவித்துள்ளார்கள். மோஷன் போஸ்டர் காட்சிகள் அனைத்தும் அரசியல் தொடர்பான கிளிப்பிங்காக உள்ளன. எனவே இந்தப்படம் நிச்சயம் அரசியல் சார்ந்து பேசப்போகும் படம் என தெரிகிறது.
கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க எஸ்ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராம் சரண் நடித்து வெளிவரும் படம் என்பதால் பான் இந்தியா படமாக இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.