ஆதிபுருஷ் படத்திற்காக 10 ஆயிரம் டிக்கெட்டுகளை கொடுக்கும் ரன்பீர் கபூர்! | லியோ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித் | சாண்டி படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா | விக்ரம் படத்தை வெளியிடும் விஜய் பட தயாரிப்பாளர்! | தமிழ் படங்களுக்கு நோ சொன்ன இளம் நடிகை | புருவ அழகுக்கு ஞாபக மறதி : அறிமுகப்படுத்திய இயக்குனர் தாக்கு | ராமனாக நடித்தது அதிர்ஷ்டம் - பிரபாஸ் | விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இரண்டு அப்டேட் | கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர் | மேகா ஆகாஷ் திருமண செய்தி உண்மையல்ல... |
தமிழில் விஷால் நடித்த திமிரு படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக நடித்திருந்தவர் மலையாள நடிகர் விநாயகன். மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் வித்தியாசமான வசன உச்சரிப்புடன் தனது முதல் தமிழ் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது மனைவியிடம் இருந்து தான் பிரிந்து விட்டதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் விநாயகன்.
இது குறித்து விநாயகன் அந்த வீடியோவில் கூறும்போது, “எனக்கும் என் மனைவிக்கும் இடையிலான அனைத்து திருமண உறவுகளும் சட்ட உறவுகளும் இந்த தருணத்தில் இருந்து முடிவுக்கு வருகின்றன” என்று கூறியுள்ளார். விநாயகனை பொறுத்தவரை, அவரது நடிப்பிற்காக பலராலும் பாராட்டப்பட்டாலும் பெரும்பாலும் பொதுவெளியில் ஏதாவது பேசி சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருப்பவர். கடந்து சில மாதங்களுக்கு முன்பு கூட பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் மரியாதை குறைவாக பேசி பின் அதற்காக மன்னிப்பு தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.