சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு பிறகு ஜூனியர் என்டிஆர் நடிக்கும் அவரின் 30வது படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்த படத்தின் மூலம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் கால்பதிக்கிறார். கொரட்டல சிவா இயக்குகிறார்.
படத்தின் பணிகளை இயக்குனர் எஸ்.எஸ்.ரஜமவுலி கிளாப் அடித்து துவக்கி வைத்தார், கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல் கேமராவை இயக்கினார். நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், தயாரிப்பாளர் தில் ராஜு, என்டிஆரின் சகோதரர் கல்யாண் ராம், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 30ம் தேதி முதல் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி வெளியாகும் என்று ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுள்ளது. இது பக்கா ஆக்ஷன் படமாக உருவாகிறது. ஐதராபாத்தைத் தவிர, விசாகப்பட்டினம் மற்றும் கோவாவில் அமைக்கப்பட்டுள்ள செட்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. நந்தமுரி தாரக ராமராவ் ஆர்ட்ஸ் மற்றும் யுவ சுதா ஆர்ட்ஸ் பேனரில் மிக்கிலேனேனி சுதாகர் தயாரிப்பாளராக உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.