என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு பிறகு ஜூனியர் என்டிஆர் நடிக்கும் அவரின் 30வது படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்த படத்தின் மூலம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் கால்பதிக்கிறார். கொரட்டல சிவா இயக்குகிறார்.
படத்தின் பணிகளை இயக்குனர் எஸ்.எஸ்.ரஜமவுலி கிளாப் அடித்து துவக்கி வைத்தார், கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல் கேமராவை இயக்கினார். நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், தயாரிப்பாளர் தில் ராஜு, என்டிஆரின் சகோதரர் கல்யாண் ராம், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 30ம் தேதி முதல் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி வெளியாகும் என்று ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுள்ளது. இது பக்கா ஆக்ஷன் படமாக உருவாகிறது. ஐதராபாத்தைத் தவிர, விசாகப்பட்டினம் மற்றும் கோவாவில் அமைக்கப்பட்டுள்ள செட்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. நந்தமுரி தாரக ராமராவ் ஆர்ட்ஸ் மற்றும் யுவ சுதா ஆர்ட்ஸ் பேனரில் மிக்கிலேனேனி சுதாகர் தயாரிப்பாளராக உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.