Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேப்டன் மில்லர் படப்பிடிப்பு : வனவிலங்குகள், சுற்றுச்சூழல் பாதிப்பு

23 மார், 2023 - 12:23 IST
எழுத்தின் அளவு:
Captain-miller-shooting-:-Environment-and-Animals-are-suffered

வாத்தி படத்தை முடித்த கையோடு அடுத்ததாக தான் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சிவராஜ்குமார் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முண்டந்துறை புலிகள் சரணாலயம் பகுதியில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அடர் வனப்பகுதியில் படப்பிடிப்பு நடப்பதால், அதற்காக அங்கு கோவில் கோபுரத்துடன் கூடிய கிராமச்சூழல் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணியர் மற்றும் கால்நடை மேய்ப்பாளர்களை கூட அனுமதிக்காத பகுதியில், தற்போது, பெரிய லாரிகளில் தளவாடப்பொருட்களை கொண்டு வந்து இறக்குகின்றனர். இதனால் அந்த பகுதியில் உள்ள வனவிலங்குகள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களுக்கும் மிகப்பெரிய இடைஞ்சல் ஏற்படுவதாக சில புகார்கள் படக்குழுவினர் மீது எழுந்து உள்ளதாம்.

குறிப்பாக அந்த தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் அதிக வெளிச்சம் தரும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். ஏற்கனவே காட்டில் இருந்து வெளியேறிய யானை ஒன்று இந்த வெளிச்சத்தால் மிரண்டு போய், வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் சுற்றி வருவதால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அச்சத்தில் இருக்கிறார்களாம்.

அதுமட்டுமல்ல படப்பிடிப்பு தளத்தில் துப்பாக்கி, வெடிகுண்டு பயன்படுத்தப்படுவது போன்ற காட்சிகள் படமாக்கப்படும்போது ஏற்படும் சத்தங்களும் அருகில் உள்ள வனவிலங்குகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும் புகார் சொல்லப்பட்டுள்ளது.

பழைய குற்றாலம், ஒப்பினாங்குளம், செங்குளம் கால்வாய் நீர்வரத்து பகுதிகள் படப்பிடிப்புக்காக சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், 15க்கும் மேற்பட்ட குளங்களில் நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராமநதி - ஜம்பு நதி இணைப்பு கால்வாய் திட்ட செயல்பாட்டுக்குழு அமைப்பாளர் ராம.உதயசூரியன், புலிகள் காப்பக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். எனினும் படப்பிடிப்பு நிறுத்தப்படாமல் தொடர்கிறது.

இதுபற்றி அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இந்த படக்குழுவினர் வனத்துறையிடம் உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்துகிறார்களா என தெரியவில்லை.. யாராவது இதுகுறித்து கேட்டால் மேலிடத்திலிருந்து எங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது என்று கூறுவதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து வனத்துறைக்கு பல புகார்கள் வந்ததை தொடர்ந்து தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருவது தொடர்பான விவரங்களை வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
லியோ படத்தில் கதிர் : நிலநடுக்கத்தால் உடைபட்ட சஸ்பென்ஸ்லியோ படத்தில் கதிர் : ... டி.எம்.சவுந்தர்ராஜன் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயர்: தமிழக அரசு அறிவிப்பு டி.எம்.சவுந்தர்ராஜன் வாழ்ந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in