'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் | உழைக்கும் கரங்கள், எஜமான், கண்ணப்பா - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனின் “தெனாலி” | நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு |
தமிழில் பேட்ட மற்றும் மாஸ்டர் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் நடிகை மாளவிகா மோகனன். ஆனால் தமிழில் தனுஷுடன் நடித்த மாறன் படத்தை தொடர்ந்து தற்போது விக்ரமுடன் இணைந்து தங்கலான் என்கிற படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அதேசமயம் சமீபத்தில் பிரபாஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தமானதன் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார் மாளவிகா மோகன். இந்த நிலையில் அடுத்ததாக இயக்குனர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாக உள்ள உஸ்தாத் பகத்சிங் என்கிற படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என தெலுங்கு மீடியாக்களில் கடந்த சில நாட்களாக ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது.
இது மாளவிகா மோகனனின் கவனத்திற்கும் சென்றது. இதைத்தொடர்ந்து, “பவன் கல்யாணுடன் நடிப்பதற்கு நான் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் தகவல் உண்மையானது அல்ல.. நான் இந்த படத்தில் நடிக்கவில்லை.. ஆனால் அதைவிட மிகப்பெரிய படம் ஒன்றின் மூலம் தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளேன். அதிலும் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக அல்ல.. மெயின் கதாநாயகியாகவே நடிக்கிறேன்” என்பதை அழுத்தமாக குறிப்பிட்டு தனது சோசியல் மீடியா பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் மாளவிகா மோகனன்.