என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன், வாழை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இதில் மாமன்னன் படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ், அந்த படத்தை முடித்ததும் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறாராம். ஏற்கனவே தனுசும் - மாரி செல்வராஜூம் இணைந்த கர்ணன் படம் மெகா ஹிட்டடித்த நிலையில் இந்த புதிய படத்தை பான் - இந்தியா படமாக இயக்கப் போவதாக கூறப்படுகிறது. தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் தனுஷ், அதையடுத்து தனது ஐம்பதாவது படத்தை இயக்கி அதில் ஒரு முக்கிய வேடத்திலும் நடிப்பவர், அந்த படத்தை முடித்ததும் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தை தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்து மீண்டும் தயாரிப்பிலும் இறங்க போகிறாராம் தனுஷ்.