'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் டிவியின் ஹிட் தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடிக்கடி நடிகர்கள் மாரி வருகின்றனர். இதுவரை 5 கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் மாறிவிட்டனர். அதிலும் இரண்டு ஹீரோயின் கதாபாத்திரங்களில் மட்டும் 5 முறை நடிகைகள் மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த தொடர் குடும்பங்களுக்கு பிடித்த தொடராக தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நீண்டநாட்களாக நடித்து வந்த சாய் காயத்ரி தற்போது சீரியலை விட்டு விலகியுள்ளார். ஏற்கனவே, இந்த கதாபாத்திரத்தில் முதலில் வைஷாலியும் அதன்பின் வீஜே தீபிகாவும் நடித்து வந்தனர். இதில் தீபிகாவின் முகத்தில் சரும பிரச்னை அதிகம் இருந்ததால் அவர் தொடரிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தான் சாய் காயத்ரி நடித்து வந்தார். தற்போது சாய் காயத்ரி விலகிவிட்ட நிலையில் வீஜே தீபிகா மீண்டும் சரவணனுக்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர்ஸில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இதனால் தீபிகாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.