'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
கடந்த வருடம் கன்னடத்தில் வெளியாகி, கன்னடம் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று பாலிவுட்டிலும் கவனத்தை ஈர்த்த படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சப்தமி கவுடா. ஆதிவாசி இனத்தை சேர்ந்த காவல்துறையில் பணிபுரியும் ஒரு பெண்ணாக நடித்து ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. இந்த நிலையில் கன்னட திரை உலகின் மறைந்த மூத்த நடிகர் ராஜ்குமாரின் பேரனும் நடிகர் ராகவேந்திரா ராஜகுமாரின் மகனுமான யுவா கிருஷ்ணா முதல்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் யுவா என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சப்தமி கவுடா.
சமீபத்தில் இந்த படத்திற்காக இவர்கள் இருவரையும் வைத்து போட்டோஷூட் நடத்தப்பட்டது. அந்தசமயம் கிரிக்கெட் கிரவுண்டில் விளையாடிக் கொண்டிருந்த சப்தமி கவுடா அங்கிருந்தபடியே நேராக தயாரிப்பு அலுவலகத்தில் சென்று போட்டோஷூட்டில் அதே உடையுடன் கலந்து கொண்டாராம். அதன் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாட மைதானத்திற்கு திரும்பிய சப்தமி கவுடாவுக்கு சில மணி நேரங்களிலேயே அவர் தேர்வாகி விட்டார் என சந்தோஷ செய்தியும் தேடி வந்ததாம்.
“நீண்ட நாளைக்கு என்னை காந்தாரா படத்தின் லீலா கதாபாத்திரமாகவே இருக்க முடியாது, எனக்குள் இன்னும் பல கதாபாத்திரங்கள் ஒளிந்துள்ளன அவற்றை ஒவ்வொன்றாக வெளிப்படுத்த போகிறேன்” என்று கூறியுள்ளார் சப்தமி கவுடா.
காந்தாரா படத்தை தயாரித்த ஹோம்பலே பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.