ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், டைரக்ஷன் பக்கம் தனது கவனத்தை திருப்பி தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வை ராஜா வை என்கிற படத்தையும் இயக்கினார்.
இந்தநிலையில் மிகப்பெரிய இடைவெளி விட்டு தற்போது லால் சலாம் என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, தனது மகளுக்காக இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். சில மாதங்களுக்கு முன் இந்த படத்திற்கான பூஜை நடைபெற்ற நிலையில் ஹோலி பண்டிகை அன்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ள அனந்தபுரதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளார் ஐஸ்வர்யா.
முதல் நாள் படப்பிடிப்பிலேயே தொடர்ந்து 16 மணி நேரம் இடைவிடாமல் காட்சிகளை படமாக்கியதாக சோசியல் மீடியா பக்கத்தில் கூறியுள்ள ஐஸ்வர்யா, படப்பிடிப்பில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். மேலும், “எனது தந்தைக்கு, தாத்தா இயக்குனர் கே.பாலசந்தர் முதன்முதலில் ரஜினிகாந்த் என பெயர் சூட்டியது இந்த ஹோலி பண்டிகை தினத்தில் தான்.. அதனால் என்னுடைய படத்தை துவங்குவதற்கு இதைவிட வேறு நல்ல நாள் என்ன இருக்கிறது” என்று தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா.