சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியில் சிறந்த இயக்குனராக மாதவன் தேர்வு | சீதை வேடத்தில் நடிக்க அசைவம் தவிர்த்தேன்: கீர்த்தி சனோன் | ஓடிடி வருகையை அன்றே அறிந்தவன் நான்: கமல்ஹாசன் பெருமை | பார்லி., புதிய கட்டடம்! வீடியோ வெளியிட்ட ஷாருக்கானுக்கு மோடி கொடுத்த பதில்! | போலி செய்தியை பரப்புபவர்கள் ஒரு நல்ல புகைப்படத்தையாவது பயன்படுத்துங்கள்! இயக்குனர் உதயநிதி | நினைத்தாலே இனிக்கும் சீரியலில் என்ட்ரியாகும் பிக்பாஸ் தாமரை செல்வி! | நான் கொஞ்சம் 'ரக்கட்': பாம்புவுடன் கொஞ்சி விளையாடும் பார்வதி! | என்.டி.ராமா ராவ் நூற்றாண்டு பிறந்தநாள் | நடிகர் கமல்ஹாசனுக்கு ‛வாழ்நாள் சாதனையாளர்' விருது : ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார் | அஞ்சலியின் 50வது படம் 'ஈகை': பர்ஸ்ட் லுக் வெளியீடு |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், டைரக்ஷன் பக்கம் தனது கவனத்தை திருப்பி தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வை ராஜா வை என்கிற படத்தையும் இயக்கினார்.
இந்தநிலையில் மிகப்பெரிய இடைவெளி விட்டு தற்போது லால் சலாம் என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, தனது மகளுக்காக இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். சில மாதங்களுக்கு முன் இந்த படத்திற்கான பூஜை நடைபெற்ற நிலையில் ஹோலி பண்டிகை அன்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ள அனந்தபுரதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளார் ஐஸ்வர்யா.
முதல் நாள் படப்பிடிப்பிலேயே தொடர்ந்து 16 மணி நேரம் இடைவிடாமல் காட்சிகளை படமாக்கியதாக சோசியல் மீடியா பக்கத்தில் கூறியுள்ள ஐஸ்வர்யா, படப்பிடிப்பில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். மேலும், “எனது தந்தைக்கு, தாத்தா இயக்குனர் கே.பாலசந்தர் முதன்முதலில் ரஜினிகாந்த் என பெயர் சூட்டியது இந்த ஹோலி பண்டிகை தினத்தில் தான்.. அதனால் என்னுடைய படத்தை துவங்குவதற்கு இதைவிட வேறு நல்ல நாள் என்ன இருக்கிறது” என்று தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா.