அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் | வேள்பாரிக்கு தீவிரம் காட்டும் ஷங்கர் : ஹீரோ யார்? | வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர் | இந்தவாரம் 6 படங்கள் ரிலீஸ் : 2025 தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்குமா? | பிளாஷ்பேக்: முதல்வர் ஸ்டாலினுடன் நடித்த பாக்யஸ்ரீ |

மறைந்த நடிகர் முத்துராமனின் மகனாக வாரிசு நடிகராக அடியெடுத்து வைத்த கார்த்திக், முதல் படத்திலேயே வெற்றிப்பட நாயகனாக மாறினார். தொடர்ந்து தனது திரையுலக பயணத்தில் பல ஹிட் படங்களை கொடுத்தார். அதேபோல் அவரது வாரிசாக, அவரது மகன் கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் என்கிற படத்தின் மூலம் நடிகராக அடியெடுத்து வைத்தார். அந்த வகையில் தற்போது திரையுலகில் 10 வருடங்களை கடந்துள்ள கவுதம் கார்த்திக் முதல் படத்திலேயே தோல்வியை சந்தித்தாலும் அடுத்தடுத்து சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி படங்கள் எதையும் பரிசாக பெறவில்லை.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து அவர் நடித்துள்ள பத்து தல என்கிற திரைப்படம் வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த மப்டி என்கிற படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவியாளரான என்.எஸ் பொன் குமார் என்பவர் இயக்கத்தில் 1947 ஆகஸ்ட் 16 என்கிற படத்திலும் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார்.
பீரியட் படமாக உருவாகியுள்ள இந்த படம் சுதந்திரப் போராட்டம் பற்றிய கதையாக இல்லாமல் சுதந்திரம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளும் அப்பாவி கிராம மக்கள் கூட்டம் பற்றிய கதையாக உருவாகியுள்ளது. அந்த கூட்டத்தில் ஒருவனாக ஆக்ரோஷமும் கோபமும் கொண்ட இளைஞனாக நடித்துள்ளார் கவுதம் கார்த்திக். இந்த படம் ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை மஞ்சிமா மோகனை வெற்றிகரமாக காதல் திருமணம் செய்து கொண்ட கவுதம் கார்த்திக், அதேபோல அடுத்தடுத்து வெளியாக இருக்கும் இந்த படங்களின் மூலம் தனது திரையுலக பயணத்தில் மிகப்பெரிய வெற்றி ஒன்றை பெறுவாரா, தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.