விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |
மறைந்த நடிகர் முத்துராமனின் மகனாக வாரிசு நடிகராக அடியெடுத்து வைத்த கார்த்திக், முதல் படத்திலேயே வெற்றிப்பட நாயகனாக மாறினார். தொடர்ந்து தனது திரையுலக பயணத்தில் பல ஹிட் படங்களை கொடுத்தார். அதேபோல் அவரது வாரிசாக, அவரது மகன் கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் என்கிற படத்தின் மூலம் நடிகராக அடியெடுத்து வைத்தார். அந்த வகையில் தற்போது திரையுலகில் 10 வருடங்களை கடந்துள்ள கவுதம் கார்த்திக் முதல் படத்திலேயே தோல்வியை சந்தித்தாலும் அடுத்தடுத்து சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி படங்கள் எதையும் பரிசாக பெறவில்லை.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து அவர் நடித்துள்ள பத்து தல என்கிற திரைப்படம் வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த மப்டி என்கிற படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவியாளரான என்.எஸ் பொன் குமார் என்பவர் இயக்கத்தில் 1947 ஆகஸ்ட் 16 என்கிற படத்திலும் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார்.
பீரியட் படமாக உருவாகியுள்ள இந்த படம் சுதந்திரப் போராட்டம் பற்றிய கதையாக இல்லாமல் சுதந்திரம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளும் அப்பாவி கிராம மக்கள் கூட்டம் பற்றிய கதையாக உருவாகியுள்ளது. அந்த கூட்டத்தில் ஒருவனாக ஆக்ரோஷமும் கோபமும் கொண்ட இளைஞனாக நடித்துள்ளார் கவுதம் கார்த்திக். இந்த படம் ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை மஞ்சிமா மோகனை வெற்றிகரமாக காதல் திருமணம் செய்து கொண்ட கவுதம் கார்த்திக், அதேபோல அடுத்தடுத்து வெளியாக இருக்கும் இந்த படங்களின் மூலம் தனது திரையுலக பயணத்தில் மிகப்பெரிய வெற்றி ஒன்றை பெறுவாரா, தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.