ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
நடிகர் கமல்ஹாசனுக்குச் சொந்தமாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற படத்தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது. கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக அந்நிறுவனம் படங்களைத் தயாரித்து வருகிறது. கமல்ஹாசன் நடிக்கும் படங்களை மட்டுமே அதிகமாகத் தயாரித்து வந்த அந்நிறுவனம் அவ்வப்போது மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களையும் தயாரித்துள்ளது.
சத்யராஜ் நடித்த 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு', ரேவதி, ஊர்வசி, ரோகிணி நடித்த 'மகளிர் மட்டும்', மாதவன் நடித்த 'நளதமயந்தி', விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' ஆகிய மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரித்துள்ளது. 40 வருடங்களில் 4 படங்கள்தான் மற்ற நடிகர்களின் படங்கள்.
ஆனால், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சிவகார்த்திகேயன் நடிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி உள்ளது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. அடுத்து சிம்பு நடிக்கும் படத்தைத் தயாரிக்கப் போவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இவை தவிர இன்னும் சில இளம் நடிகர்களிடமும் பேசி வருகிறார்களாம். அவை பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.