லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

நடிகர் கமல்ஹாசனுக்குச் சொந்தமாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற படத்தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது. கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக அந்நிறுவனம் படங்களைத் தயாரித்து வருகிறது. கமல்ஹாசன் நடிக்கும் படங்களை மட்டுமே அதிகமாகத் தயாரித்து வந்த அந்நிறுவனம் அவ்வப்போது மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களையும் தயாரித்துள்ளது.
சத்யராஜ் நடித்த 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு', ரேவதி, ஊர்வசி, ரோகிணி நடித்த 'மகளிர் மட்டும்', மாதவன் நடித்த 'நளதமயந்தி', விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' ஆகிய மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரித்துள்ளது. 40 வருடங்களில் 4 படங்கள்தான் மற்ற நடிகர்களின் படங்கள்.
ஆனால், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சிவகார்த்திகேயன் நடிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி உள்ளது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. அடுத்து சிம்பு நடிக்கும் படத்தைத் தயாரிக்கப் போவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இவை தவிர இன்னும் சில இளம் நடிகர்களிடமும் பேசி வருகிறார்களாம். அவை பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.