'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாள தயாரிப்பாளர் சிஜூ தமீன்ஸ் தயாரிக்கும் தமிழ் படம் 'மெமரீஸ்'. இதனை மலையாள இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஷியாம் பர்வீன் இயக்குகிறார். மலையாள நடிகை பார்வதி அருண் கதையின் நாயகியாக நடிக்கிறார். அவருடன வெற்றி, தனன்யா, ரமேஷ் திலக், ஹரீஷ் பெரடி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் ஷியாம் பர்வீன் கூறியதாவது: வெற்றி, 'ஜீவி' படத்தில் நடிக்கும் முன்பே இந்த படத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்து விட்டோம். கொரோனா காலத்தால் சற்று தாமதமாகி விட்டது. கொரோனா காலத்துக்கு முன்பு வரை மலையாள சினிமா ஒரு சில குறிப்பிட்ட ஹீரோக்களை சுற்றித்தான் இருந்தது. புதுமுகங்களின் படங்களுக்கு வியாபாரம் இல்லாமல் இருந்தது. தற்போது ஓடிடி தளத்தின் வருகைக்கு பிறகு இந்த நிலை மாறிவிட்டது.
இதன் காரணமாக மலையாள இயக்குனர்களுக்கு தமிழ் படம் இயக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். காரணம் இங்கு புதியவர்களின் சினிமாவுக்கும் வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில்தான் இந்த படம் தொடங்கப்பட்டது. தற்போது எல்லா பணிகளும் முடிந்து வருகிற 10ம் தேதி படம் வெளிவருகிறது.
சினிமா இயக்குனராக துடிக்கும் ஒரு இளைஞனுக்கு திடீரென தனது நினைவுகள் மறந்து விடுகிறது. தன்னை யார் என்றே அவனுக்கு தெரியவில்லை. இந்த நிலையில் அவன் மீது சில கொலை பழிகள் சுமத்தப்படுகிறது. அவற்றில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான் என்பதுதான் படத்தின் கதை. என்றார்.