ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் |
மும்பையில் உள்ள நடிகர் அமிதாபச்சனின் பங்களாவில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக யாரோ மர்ம நபர் நாக்பூர் காவல் நிலையத்துக்கு தொலைபேசியில் ஒரு அதிர்ச்சி செய்தியை கொடுத்திருக்கிறார். அதையடுத்து நாக்பூர் போலீசார் மும்பை காவல் துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்குள்ள போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் அமிதாப்பச்சனின் வீட்டை சோதனை செய்துள்ளார்கள். ஆனால் இந்த தேடுதல் வேட்டையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லையாம்.
அதைபோல் நடிகர் தர்மேந்திரா வீட்டிலும் வெடிகுண்டு இருப்பதாக இன்னொரு மர்ம போன் காலும் வந்திருக்கிறது. அங்கு நடத்தப்பட்ட சோதனையிலும் வதந்தி என்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக மும்பை போலீசார் தற்போது அலார்ட்டாகி இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.