சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

மும்பையில் உள்ள நடிகர் அமிதாபச்சனின் பங்களாவில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக யாரோ மர்ம நபர் நாக்பூர் காவல் நிலையத்துக்கு தொலைபேசியில் ஒரு அதிர்ச்சி செய்தியை கொடுத்திருக்கிறார். அதையடுத்து நாக்பூர் போலீசார் மும்பை காவல் துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்குள்ள போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் அமிதாப்பச்சனின் வீட்டை சோதனை செய்துள்ளார்கள். ஆனால் இந்த தேடுதல் வேட்டையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லையாம்.
அதைபோல் நடிகர் தர்மேந்திரா வீட்டிலும் வெடிகுண்டு இருப்பதாக இன்னொரு மர்ம போன் காலும் வந்திருக்கிறது. அங்கு நடத்தப்பட்ட சோதனையிலும் வதந்தி என்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக மும்பை போலீசார் தற்போது அலார்ட்டாகி இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.