பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை |

உலக அளவில் மதிப்பு மிக்க திரைப்பட விருதுகளாகக் கருதப்படும் விருதுகளாக அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் இருக்கிறது. 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்வு மார்ச் 12ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த வருட விருதில், 'சிறந்த ஒரிஜனல் பாடல்' பிரிவில் தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது. 'ஆர்ஆர்ஆர்' குழுவினர் தற்போது இந்த விருது விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் உள்ளனர்.
இதனிடையே, இந்த வருடம் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் 'நாட்டு நாட்டு' பாடலை மேடையில் நேரடியாகப் பாட உள்ளார்கள். தெலுங்குப் பாடலைப் பாடிய ராகுல் சிப்லிகுன்ச் மற்றும் கால பைரவா இருவருமே ஆஸ்கர் மேடையில் பாடப் போகிறார்கள். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆஸ்கர் அகடமி அறிவித்துள்ளது. இந்தியக் கலைஞர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு மதிப்பு மிக்க நிகழ்வாக இது கருதப்படுகிறது.