பிளாஷ்பேக் : காணாமல் போன 'கண்ணின் மணிகள்' | நீதிமன்ற தீர்ப்பு எனக்கு ஆச்சர்யமளிக்கவில்லை : நடிகை அறிக்கை | அவதார் 3 ரிலீஸ் : ஒதுங்கும் தமிழ்ப் படங்கள் | விஜயகாந்தின் நல்ல மனசு : சரத்குமார் உருக்கம் | அப்பா ரஜினி படத்தை இயக்குகிறேனா? : மகள் சவுந்தர்யா சொன்ன பதில் | இளையராஜாவும், யுவுனும் இணைந்து பாடிய அம்மா சென்டிமென்ட் பாடல் | பொங்கலுக்கு இத்தனை பான் இந்தியா படங்கள்? தாங்குமா தியேட்டர்கள் ? | வார்த்தை விட்டு மாட்டிக்கொண்ட ராதிகா ஆப்தே! | தெலுங்கில் டப் செய்யப்படும் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | ஜனவரி 9ம் தேதி விஜய்யின் ஜனநாயகனுடன் மோதுகிறதா பராசக்தி? |

நடிகர் சிம்புவுக்கு அவரது பெற்றோர்களான டி.ராஜேந்தர் - உஷா தம்பதிகள் கடந்த சில ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் பார்த்து வருகிறார்கள். சிம்புவின் திருமணம் குறித்து பல வதந்திகள் அவ்வப்போது வெளிவருவது வழக்கம். அந்த வகையில், நடிகர் சிம்புவுக்கு இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் பெண்ணை (தமிழ் பெண்ணை) நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராத நிலையில், தற்போது சிம்பு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிம்பு தரப்பிலிருந்து தற்போது இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் மேனேஜர் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‛இலங்கை தமிழ் பெண் ஒருவரை நடிகர் சிம்பு திருமணம் செய்ய உள்ளதாக சில செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்தியை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். இதில் எந்தவிதமான உண்மையையும் இல்லை. திருமணம் போன்ற தனிப்பட்ட விஷயங்கள் குறித்து செய்தி வெளியிடும்போது தகவலை உறுதி செய்து அதன்பின் வெளியிட வேண்டிக் கொள்கிறோம். சிம்புவின் திருமணம் குறித்த தகவல் உறுதியானால் முதலில் நாங்கள் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்வோம்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




