தமிழில் கிடப்பில் போடப்பட்ட பாட்டு மலையாளத்தில் எனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது : வித்யாசாகர் | டிச., 18ல் ‛ஜனநாயகன்' படத்தின் இரண்டாவது பாடல் | ஜெயிலர் வெளியான அதே ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் ஜெயிலர் 2 | சூர்யாவின் இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியாகிறதா? | துரந்தர் 2வை உடனே வெளியிடுங்கள் : ஷ்ரத்தா கபூர் வேண்டுகோள் | களம்காவல் வெற்றிக்கு விநாயகனுடன் இணைந்து நன்றி சொன்ன மம்முட்டி | ரிலீஸ் பற்றி வாய் திறக்காத 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | இயக்குனருக்கு முதல் முறை கார் பரிசளித்த பவன் கல்யாண் | சிக்ரி சிக்ரி : 100 மில்லியனைக் கடந்த ஏஆர் ரஹ்மானின் முதல் தெலுங்குப் பாடல் | எனக்கு சினிமா பசி அதிகம்: சித்தி இத்னானி |

தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பழக்கங்களுக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், போதையற்ற தமிழ்நாடு என்ற முழக்கத்தினை முன்வைத்து ஒரு கோடி கையெழுத்து என்ற இயக்கத்தை துவங்கியுள்ளது. போதை பழக்கத்திலிருந்து தமிழகத்தை காக்கவும், இளைஞர்களின் எதிர்காலத்தை போதையின் பிடியில் இருந்து மீட்கவும் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை கடந்த 12ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா தொடங்கி வைத்தார். ஏராளமானோர் இந்த போதைக்கு எதிரான விழிப்புணர்வு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோரும் இதில் கையெழுத்திட்டார்கள். அவர்களை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்தும் தன்னுடைய ஆதரவை தெரிவித்து கையெழுத்திட்டுள்ளார். இப்படி போதையற்ற தமிழ்நாடு இயக்கத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் கையெழுத்திட்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




