மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

பழம்பெரும் ஒளிப்பதிவாளரும், இயக்குனர் பி வாசுவின் சித்தப்பாவுமான எம்சி சேகர் (91) வயது மூப்பு காரணமாக காலமானார்.
இயக்குனர் பி வாசுவின் தந்தையும், மேக்கப் கலைஞருமான பீதாம்பரத்தின் தம்பியான சேகர், 1986ல் திரையுலகில் அறிமுகமானார். ஆயிரம் கண்ணுடையாள், பன்னீர் புஷ்பங்கள், ரஜினியின் பணக்காரன், உழைப்பாளி, விஜயகாந்தின் சேதுபதி ஐபிஎஸ், சத்யராஜின் வால்டர் வெற்றிவேல், ரிக் ஷா மாமா, சரத்குமாரின் கூலி உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.
பி வாசுவின் அனேக படங்களுக்கு இவர் தான் ஒளிப்பதிவாளராக இருந்துள்ளார். தமிழ் தவிர்த்து தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நூற்றுக்கணக்கான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தனது சாகோதரர் பீதாம்பரத்துடன் இணைந்து சில படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.
எம்சி சேகரின் மறைவு திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.