மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' |
மலையாள திரையுலகில் நடிகர் மம்முட்டியின் வாரிசாக செகண்ட் ஷோ என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் துல்கர் சல்மான். ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் இந்த படத்தை இயக்கினார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப்படத்தில் தான் மலையாள நடிகை கௌதமி நாயரும் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாக நடித்த கௌதமி நாயர், கடந்த 2017ல் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரனையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போதே அவர்கள் இருவருக்குமான வயது வித்தியாசம் பரபரப்பாக பேசப்பட்டது.
இவர்கள் திருமணம் முடிந்த ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது தங்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாக ஒரு தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் கௌதமி நாயர். இதுகுறித்து அவர் கூறும்போது, “திருமண வாழ்க்கை துவங்கிய சில காலகட்டங்களிலேயே எனக்கும் அவருக்குமான கருத்து வேறுபாடு மிகப்பெரிய பிரச்சனையாக தலை தூக்கியது. அதேசமயம் அவரிடம் இருந்து துன்புறுத்தல், அச்சுறுத்தல் என எந்த ஒரு தவறான செய்கையும் என் மேல் பிரயோகிக்கப்படவில்லை. யாராவது ஒருவராவது சமரசம் செய்து கொண்டு விட்டுக்கொடுத்து சென்றிருக்க வேண்டும். ஆனால் எங்கள் இருவராலும் அப்படி சமரசம் செய்து கொள்ள முடியவில்லை. இருவருமே ஒருவருக்கொருவர் பேசி டீசன்டாக பிரிந்து விடலாம் என இந்த முடிவுக்கு வந்தோம். இப்போது கூட நாங்கள் நண்பர்களைப் போல அவ்வப்போது ஒருவர் குறித்து ஒருவர் விசாரித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.