பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன் | ஆஸ்பத்திரியில் ரோபோ சங்கர் : அவர் உடல்நிலை எப்படி இருக்கிறது | திரிஷ்யம் படத்தின் கிளைமாக்ஸ் ஆக நான் முதலில் எழுதிய காட்சி வேறு ; ஜீத்து ஜோசப் | இயக்குனருக்கு தெரிவிக்காமலேயே ரீ ரிலீஸுக்கு தயாராகி வரும் மம்முட்டியின் 'சாம்ராஜ்யம்' | ஹேக் செய்யப்பட்ட மொபைல் போன்கள் ; உபேந்திரா-பிரியங்கா தம்பதி விடுத்த எச்சரிக்கை | பிரதமர் மோடிக்கு, ரஜினி, கமல், இளையராஜா பிறந்தநாள் வாழ்த்து | 'காந்தாரா சாப்டர் 1' டப்பிங்கை முடித்த ருக்மிணி வசந்த் | 'கூலி' பைனல் வசூல் அறிவிக்கப்படுமா ?, ரசிகர்கள் எதிர்பார்ப்பு | காதலுக்காக பாலினத்தை மாற்றும் ஜோடி: 'சரீரம்' படக்கதை இதுதான் | தமிழில் ரீமேக் ஆன ஸ்ரீலீலா படம்; செப்.,26ல் ரிலீஸ் |
பாடகர் மனோலார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரிப்பில், மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இன்று வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் மிர்ச்சி சிவாவுடன் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், மாகாபா ஆனந்த், ஷா ரா, திவ்யா கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். பாடகர் மனோ பல வருடங்களுக்கு பிறகு நடித்துள்ளார்.
1992ம் ஆண்டு கமல் நடித்த 'சிங்காரவேலன்' படத்தில் நடிகராக அறிமுகமான மனோ, அதன்பிறகு பொறந்த வீடா புகுந்த வீடா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பிறகு நடிக்கவில்லை. தற்போது இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இசையில் பிசியாக இருந்த என்னை கமல் சார் என் மீதுள்ள அன்பின் காரணமாக சிங்காரவேலன் படத்தில் அறிமுகப்படுத்தினார். ஊட்டியில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நேரம் கிடைக்கும்போது பாடல்களை பாடி வந்தேன். பாடகர், நடிகர் என்று எனது பயணத்தை தொடர நினைத்தபோது இளையராஜா சார் அழைத்து "நடிப்பதாக இருந்தால் அதில் தீவிரம் காட்டு, பாடுவதாக இருந்தால் அதில் தீவிரம் காட்டு. உனக்காக எந்த பாடலும் காத்திருக்காது" என்றார். அவரது கருத்தை அப்படியே ஏற்று பாடுவதில் கவனம் செலுத்தினேன். இடைவெளி கிடைத்தபோது சில படங்களில் நடித்தேன். பிறகு அதையும் நிறுத்தி விட்டேன்.
இப்போது இந்த படத்தின் இயக்குனர் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்தது. முதலில் நடிக்க மறுத்து விட்டேன். பிறகு இயக்குனர் தொடர்ந்து வலியுறுத்தினார். அறிமுக இயக்குனர், இளைஞராக இருக்கிறார். அவரை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக நடிக்க முடிவெடுத்தேன். இப்போது திரைப்பட படங்களில் பாடுவதை விட மேடை கச்சேரிகளில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறேன். இந்த படத்தின் மூலம் ரசிகர் என்னை மீண்டும் ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து நடிப்பது பற்றி முடிவு செய்வேன். என்றார்.