இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
சிகை, பக்ரீத் படங்களை இயக்கிய ஜெகதீசன் சுபு இயக்கி உள்ள புதிய படம் 'இரவு'. இதனை பக்ரீத் படத்தை தயாரித்த எம்.எஸ் முருகராஜ் தயாரித்துள்ளார். அரியா செல்வராஜ் என்ற புதுமுகம் நாயகியாக அறிமுகமாகிறார். இவர்கள் தவிர மன்சூரலிகான், சுனிதா கொகய், சாந்தனா பரத், தீபா சங்கர், பொன்னம்பலம், ஜார்ஜ் மரியான் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீனிவாசன் தயாநிதி ஒளிப்பதிவு செய்கிறார். எல்.வி.முத்து கணேஷ் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ஜெகதீசன் சுபு கூறியதாவது : சிகை படத்தில் திருநங்கையின் காதலை சொன்னேன், பக்ரீத்தில் ஒட்டகத்திற்கும், மனிதனுக்குமான அன்பை சொன்னேன். இந்த படம் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம். ஒரு நாளில் நடக்கிற மாதிரியான கதை. தன் முன்னால் நடப்பது நிஜமா, கற்பனையான என்று தெரியாத ஒரு இளைஞன் அந்த பிரச்சினையில் இருந்து எப்படி வெளியில் வருகிறான் என்பதுதான் படத்தின் கதை. என்றார்.