எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
'துணிவு' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்க உள்ள அவரது 62வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. கடந்த இரண்டு வாரங்களாகவே இப்படத்தின் அறிவிப்பை எதிர்நோக்கி அஜித் ரசிகர்கள் காத்துள்ளனர்.
மகிழ்திருமேனி தான் படத்தை இயக்கப் போகிறார் என்பது உறுதி ஆன நிலையில், இப்படத்திற்காக அவருக்கு சென்னையில் தனி அலுவலகம் கூட அமைத்துக் கொடுத்துவிட்டார்களாம். படத்தின் கதாநாயகி யார், மற்ற நடிகர்கள், நடிகைகள் யார், இசையமைப்பாளர் யார் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அதையெல்லாம் உறுதி செய்த பிறகு ஒரு முழுமையான அறிவிப்பை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
படத்தின் படப்பிடிப்பு எப்படியும் ஏப்ரல் மாதம்தான் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. பெரிய பட்ஜெட்டில் படத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம். எனவே, படத்தை இந்த வருட தீபாவளிக்கு வெளியிட வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள். 2024 பொங்கலுக்கு படத்தை வெளியிடும் விதத்தில் படம் உருவாகலாம் என்பதே லேட்டஸ்ட் தகவல்.