இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஆர்.சந்துரு இயக்கத்தில் கிச்சா சுதீப், உபேந்திரா, ஸ்ரேயா நடித்துள்ள படம், 'கப்ஜா கன்னடத்தில் தயாராகியுள்ள இந்த படம் வருகிற மார்ச் 17ம் தேதி கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்பட 7 மொழிகளில் வெளியாகிறது.
இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் ஸ்ரேயா பேசியதாவது: தமிழ் சினிமா எனக்கு நிறைய கொடுத்துள்ளது. அதனால் தான் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். நான் மிகவும் சிரமப்பட்டு நடித்த படம் இது. பெரும்பகுதி படப்பிடிப்பு அரங்கம் அமைத்து படமானது. அந்த அரங்கங்களில் தூசி நிறைய இருந்தது. இதனால் சைனஸ் பிரச்சினையால் அவதிப்பட்டு நடித்தேன்.
தற்போது உருவாகும் படங்கள் பான் இந்தியா படங்களாக மொழிகள் மற்றும் எல்லைகளைக் கடந்து மிகப்பெரிய வெற்றி பெறுகின்றன. வசூலிலும் சாதனை படைக்கின்றன. இதன்மூலம் சினிமாவுக்கு மொழி முக்கியம் இல்லை என்பது உறுதியானது. அனைத்துப் படங்களையும் அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கின்றனர். அந்த வரிசையில் இந்த படமும் அனைவருக்கும் பிடிக்கும். தொடர்ந்து நான் சினிமாவில் நடிக்க கணவர் அதிக ஒத்துழைப்பு தருகிறார். ரசிகர்களின் அன்பும், ஆதரவும் இருக்கும் வரை தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்.
எனது பெரிய ஆசை என்னவென்று கேட்டால் சிவாஜி படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தேன் மீண்டும் அவரது ஜோடியாக நடிக்க ஆசை. அந்த வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன். என்றார்.