அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
தமிழில் பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வருபவர் 'ரோபோ' சங்கர். இவரின் வீட்டில், சட்டவிரோதமாக கிளிகள் வளர்க்கப்பட்டதாக கூறி அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த கிளிகள், கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன. இது குறித்து விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் சட்டவிரோதமாக கிளிகள் வளர்த்ததாக கூறி ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வருத்தம் தெரிவித்தால் வழக்கு இல்லை என்றும் வெறும் அபராதம் மட்டுமே விதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது : ‛‛எங்கள் திருமணநாளுக்கு நண்பர்கள் பரிசாக அந்த கிளிகளை தந்தனர். நாங்கள் பச்சைக்கிளி என்றே நினைத்து வளர்த்தோம். பிராணிகள் மீது எங்களுக்கு பிரியம் அதிகம். நாய்க்குட்டி, மீன் வளர்ப்பது போன்று தான் இந்த கிளிகளையும் வளர்த்தோம். சில தினங்களுக்கு முன்பு தான் எங்களுக்கு தெரிந்தது அது விலை உயர்ந்த அலெக்ஸாண்டர் ரக கிளி என்று. நாங்கள் இலங்கைக்கு நிகழ்ச்சி ஒன்றுக்காக 14ம் தேதி சென்றோம். அப்போது எங்கள் வீட்டுக்கு வந்த வனத்துறையினர் உறவினர்களிடம் செய்தியை தெரிவித்து விட்டு கிளிகளை எடுத்து சென்றனர். எங்களுக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் சில விசயங்களை தெரிந்து கொண்டோம்'' என்றார்.