Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛சரஸ்வதி' போன்றவர் வாணி அம்மா : திரைக்கலைஞர்கள் புகழஞ்சலி, பிரபலங்கள் இரங்கல்

04 பிப், 2023 - 18:29 IST
எழுத்தின் அளவு:
Celebrities-condolence-to-Singer-Vani-Jayaram

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78), வீட்டில் வழுக்கி விழுந்ததில் உயிர் இழந்தார். அவரது மறைவுக்கு முதல்வர், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்
இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி, கலைவாணி என்ற திருமதி வாணி ஜெயராம் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். திருமதி வாணி ஜெயராம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் உண்டோ அத்தனையும் பாடி நம்மையெல்லாம் மகிழ்வித்த இசைக்குயில் வாணி ஜெயராம் அவர்கள் மறைவுச் செய்தி மனத்துயர் அளித்தது. இந்தியாவின் இதய கமலமாக, பத்மபூஷன் என்று வாழும் காலத்தில் விருது வழங்கிக் கொண்டாடப்பட்ட வாணி ஜெயராம் அவர்களின் இழப்பு இசை உலகின் பேரிழப்பு. அவரின் ஆன்மா அமைதி பெற வேண்டுகிறேன். ஓம் சாந்தி!

புதுச்சேரி கவர்னர் தமிழிசை
பழம்பெரும் பிரபல திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. தனது இனிமையான குரல் வளத்தால் அனைவரின் மனதிலும் இடம் பிடித்த அவரது இழப்பு, இசை ரசிகர்களுக்கு பேரிழப்பு

அமமுக பொதுச்செயலாளர் தினகரன்
வசீகரிக்கும் குரலால் தமிழர்களின் மனதைக் கட்டிப் போட்ட பிரபலப் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உற்றார், உறவினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

தீனா (இசையமைப்பாளர்)

இது மிகவும் வருத்தமான செய்தி. இவர்களை இளவரசி என்று சொல்லலாம். இசை சங்கத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தவர். கடந்த இரு வாரங்களுக்கு முன் பத்ம பூஷண் விருது மத்திய அரசு அறிவித்தது. அவர்களுடைய ஆன்மா சாந்தி அடையட்டும்.

தேவா(இசையமைப்பாளர்)
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலச்சுப்பிரமணியன் மறைவில், எற்பட்ட புண் இன்னும் ஆறவில்லை. அதற்குள் வாணி ஜெயராமின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் ரொம்ப நல்லவர். நான் மனதுயரத்தில் இருக்கிறேன். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்.

கேஎஸ் சித்ரா (பின்னணி பாடகி)
வாணி அம்மாவின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவரிடம் பேசினேன். நிஜமான லெஜண்ட். வலுவான கிளாசிக்கல் அடித்தளத்துடன் கூடிய பல்துறை மற்றும் பன் மொழி பாடகர் ஆவார். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

குஷ்பு (நடிகை)
மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி. நாம் இன்னும் ஒரு நவரத்தினத்தை இழந்துவிட்டோம். வாணி ஜெயராம் ஜி இப்போது நம்மிடையே இல்லை. பல ஆண்டுளாக நம்மைக் கவர்ந்த ஒரு குரல் நம்மை மனவேதனைக்கு உள்ளாக்கிவிட்டது. அவருடைய இனிமையான மற்றும் மென்மையான இயல்பு அவருடைய குரலில் தெளிவாகத் தெரிந்தது. நீங்கள் என்றும் நினைவில் இருப்பீர்கள் அம்மா.

புஷ்பவனம் குப்புசாமி (பாடகர்)
மனதில் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிமையாக பாடக்கூடிய பாடகி. எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பார். பாடகிக்கு உரிய லட்சணம் பெற்றவர். அவரின் உடல் நம்மை விட்டு போகிறது. ஆனால் அவர் பாடிய பாடல் உயிர் தான். அது காலம் காலமாக நம்மிடம் வாழ்ந்து கொண்டிருக்கும்.

பாக்யராஜ்(இயக்குனர்)
தாங்க முடியாத செய்தி. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிராத்தனை செய்ய வேண்டும். எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.

வேல்முருகன்(பாடகர்)
மீள முடியாத துயரம். வெளிநாடுகளில் அவருடன் பயணம் செய்து, பாடல் பாடிய நிகழ்வு மனதில் ஞாபகம் வருகிறது. இது மிக பெரிய இழப்பு. மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.

மனோபாலா (இயக்குனர்)
இவர் 14 மொழியில் பாடல் பாடியவர். தெலுங்கு உள்ளிட்ட பாடல்களுக்கு தேசிய விருது வாங்கியுள்ளார். சரஸ்வதி போன்றவர் தான் வாணி அம்மா. அவரின் குரல் தெய்வீகமானது. திரையுலகில் 20 நாட்களாக இறப்பு செய்தி வந்து கொண்டிருப்பது மன வேதனை அளிக்கிறது. இனி அவர்களின் பாடல் மட்டும் தான் கேட்க முடியும். அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.

தாணு (தயாரிப்பாளர்)
காற்றில் கலந்த இசைக்குயில்! லெஜெண்ட் சிங்ர் வாணி ஜெயராம் அம்மா இன்று நம்மோடு இல்லை. அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

ராதிகா சரத்குமார் (நடிகை)
வாணி ஜெயராம் அவர்களின் மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. நேற்று இரவு நான் அவரது பாடலை கேட்டேன். கே.விஸ்வநாத் சார் படத்தில் அவர் பாடலை எவ்வளவு அழகாக வழங்குகிறார் என்று என் கணவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். நான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன்.

ஜிப்ரான் (இசையமைப்பாளர்)
பாடகி பத்ம பூஷண் வாணி ஜெயராம் மறைவு தமிழ் இசை உலகுக்கு உண்மையிலேயே மிகப் பெரிய இழப்பு. தனது குரலால் ஏராளமான பாடல்களை விட்டுச் சென்றுள்ளார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

ஹாரிஸ் ஜெயராஜ் (இசையமைப்பாளர்)
வாணி ஜெயராம் அம்மாவின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரது குரலை மிஸ் செய்கிறேன். சொந்தமாக ரெக்கார்டிங் ஸ்டுடியோவை உருவாக்க என்னை அவர் ஊக்குவித்ததை வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது.

கமல்ஹாசன் (நடிகர்)
வார்த்தைகளுக்குப் பதவி உயர்வு கொடுப்பது போன்றதொரு அரிய பாணியில் எத்தனையோ பாடல்களை உலகுக்குப் பரிசளித்த பறவையாக வாழ்ந்த வாணி ஜெயராம் அம்மையார் அமைதியடைந்திருக்கிறார். அவர் பாடல்கள் நம்மிடம் இருக்கும். அவருக்கென் அஞ்சலி.

சுஹாசினி (நடிகை)
என்ன ஒரு அருமையான குரல். நாங்கள் கடைசியாக சந்தித்தபோது அவரின் குரல் அவ்வளவு தெளிவாக இருந்தது. பொலேரே பாப்பி, 7 ஸ்வரங்கள், மல்லிகை, நானே நானா முதல் எனது பாடலான மேகமே மேகமே... போன்ற அவரது பாடல்கள் எங்கள் இதயத்திலிருந்து வெளிவரவில்லை. நன்றி வாணி ஜெயராம் அக்கா.

"மலை" படக்குழு வருத்தம்
பிரபல பழம்பெரும் பாடகி "பத்ம பூஷன்" திருமதி.வாணி ஜெயராம் அவர்களின் திடீர் மறைவு தமிழ் சினிமா உலகிற்கும் , இசை உலகிற்கும் பெரும் இழப்பு. இசையமைப்பாளர் இமான் இசையில் 'மலை' திரைப்படத்திற்கு பாடியது அவர் பாடிய இறுதி திரை இசைப்பாடலாகும். இந்த படத்தின் இசை விழாவை பெரும் விமரிசையாக நடத்தவும், வாணி ஜெயராம் அவர்களை கவுரவிக்கும் விதமாகவும் தனிப்பெரும் பாராட்டு விழாவாகவும் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில் அவரின் திடீர் மறைவு படக்குழுவினருக்கு பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இமான் இசையில் அவர் பாடிய பாடல் உள்ளத்தை வருடும் படி வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும், இந்த பாடலை அவருக்கு காணிக்கையாக்குவதாகவும் படக்குழுவினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வாணி ஜெயராம் இறந்தது எப்படி? - வீட்டு பணிப்பெண் பரபரப்பு தகவல்வாணி ஜெயராம் இறந்தது எப்படி? - வீட்டு ... பிரபல நடிகரும், இயக்குனருமான டி.பி.கஜேந்திரன் காலமானார்: முதல்வர் நேரில் அஞ்சலி பிரபல நடிகரும், இயக்குனருமான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in