2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

டாப் ஹீரோக்களுக்கு வில்லன், குணசித்ரம், சிறப்பு தோற்றங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி தற்போது மீண்டும் பக்கா ஆக்ஷன் படத்திற்கு வருகிறார். இந்த படத்தை விதார்த், பாரதிராஜா நடித்த குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் இயக்குகிறார். நட்டி நட்ராஜ், முனிஸ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் உட்பட பலர் நடிக்கின்றனர். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு அஜ்னீஸ் லோக்நாத் இசை அமைக்கிறார்.
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படம் பற்றி இயக்குநர் நித்திலன் கூறும்போது, “இது ஆக்ஷன் படம். இந்தப் படத்தில் சாதாரண மனிதனை அசாதாரணமான மனிதனாக மாற்றும் சமூகம் பற்றிய கதை. பழிவாங்கும் கதை என்றும் சொல்லலாம். வில்லனுக்கு கதையில் பெரிய முக்கியத்துவம் இருப்பதால் சில முன்னணி நடிகர்களுடன் பேசி வருகிறோம். சென்னையில் இன்று (பிப் 1)படப்பிடிப்பு தொடங்குகிறது. ஹீரோயின் முடிவாகவில்லை. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றார்.