பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

டாப் ஹீரோக்களுக்கு வில்லன், குணசித்ரம், சிறப்பு தோற்றங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி தற்போது மீண்டும் பக்கா ஆக்ஷன் படத்திற்கு வருகிறார். இந்த படத்தை விதார்த், பாரதிராஜா நடித்த குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் இயக்குகிறார். நட்டி நட்ராஜ், முனிஸ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் உட்பட பலர் நடிக்கின்றனர். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு அஜ்னீஸ் லோக்நாத் இசை அமைக்கிறார்.
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படம் பற்றி இயக்குநர் நித்திலன் கூறும்போது, “இது ஆக்ஷன் படம். இந்தப் படத்தில் சாதாரண மனிதனை அசாதாரணமான மனிதனாக மாற்றும் சமூகம் பற்றிய கதை. பழிவாங்கும் கதை என்றும் சொல்லலாம். வில்லனுக்கு கதையில் பெரிய முக்கியத்துவம் இருப்பதால் சில முன்னணி நடிகர்களுடன் பேசி வருகிறோம். சென்னையில் இன்று (பிப் 1)படப்பிடிப்பு தொடங்குகிறது. ஹீரோயின் முடிவாகவில்லை. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றார்.




