பாலிவுட்டில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா பூஜா ஹெக்டே? | 'கருப்பு' வெளிநாட்டு வசூல் : 7 மில்லியன் யுஎஸ் டாலர் | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி சொல்லும் ராம் சரண் ரசிகர்கள் | மலையாள படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த லோகேஷ் கனகராஜ் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் மூன்று படங்கள்! | விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன் : அமைச்சர் ராஜ்மோகன் | 40 வருடங்களை நிறைவு செய்யும் 'விக்ரம்' | 400 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ஜெயிலர் - காவாலய்யா' | ரிலீஸூக்கு தயாராகும் சர்வர் சுந்தரம்? | ஹிரித்திக் ரோஷனிடம் வந்து நிற்கும் ஜெயிலர் 2 |

மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 67வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் இந்த படத்தின் டெக்னீசியன்கள் பட்டியல் வெளியாகியுள்ளது என்றாலும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய்தத், பிரித்விராஜ் ஆகியோர் வில்லன்களாக நடிக்கும் நிலையில், காந்தாரா படத்தின் நாயகனான ரிஷப் ஷெட்டியும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகி வந்தது. ஆனால் தற்போது தான் அளித்த ஒரு பேட்டியில், விஜய் 67வது படத்தில் தான் நடிக்கவில்லை என்றும், தன்னைக் அப்படத்தில் நடிப்பதற்கு யாரும் அணுகவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் விஜய் 67வது படத்தில் ரிஷப் ஷெட்டி நடிப்பதாக வெளியான செய்திகள் வதந்தி என்று தெரியவந்துள்ளது.




