ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
பிரின்ஸ் படத்தை அடுத்து மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்க, மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கும் இந்த படத்தின் இயக்குர் மடோன் அஸ்வினுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இதுவரை படமாக்கிய காட்சிகளை அப்படியே போட்டுவிட்டு, புதிதாக ஒரு கதையை தயார் செய்து அதை அவர்கள் படமாக்கப் போவதாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் பரவிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மாவீரன் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அது குறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதில், மாவீரன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு புதிய கதை தயார் செய்யப்பட்டு வருவதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தியாகும். இந்த படம் குறித்து அவதூறு பரப்ப வேண்டும் என்று யாரோ திட்டமிட்டு இது போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள். இந்த செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். மாவீரன் படத்தின் படப்பிடிப்பு எந்தவித பிரச்சினை இன்றி அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறி உள்ளனர்.
மேலும், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கார்ட்டூனிஸ்ட்டாக நடிப்பதாகவும், அவர் வரையும் கார்ட்டூன்களே பின்னர் கதாபாத்திரங்களாக வந்து அவரை துரத்துவது போன்ற ஒரு கதையில் இப்படம் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.