நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான பாக்கியலெட்சுமி தொடரில் இரண்டாவது நாயகியான ராதிகா கதாபாத்திரத்தில் முதலில் ஜெனிபர் நடித்து வந்தார். அவர் விலகிய பின் ரேஷ்மா பசுபலேட்டி நடித்து வருகிறார். அண்மையில் இந்த தொடர் 700வது எபிசோடுக்கான வெற்றிவிழாவை கொண்டாடினாலும், திரைக்கதை முன்பு போல சுவாரசியமாக இல்லாததால் டிஆர்பியில் சறுக்கி வருகிறது.
இந்நிலையில், ரேஷ்மாவுக்கு ஜீ தமிழின் புதிய தொடர் சீதாராமன் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனைதொடர்ந்து ரேஷ்மா சீரியலை விட்டு விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. அவரும் பாக்கியலெட்சுமி சீரியல் ஸ்பாட்டில் தனது நினைவுகளை பகிர்ந்து வீடியோ வெளியிட்டிருந்தார். எனவே, அவர் விலகுவது உறுதி எனவும், அவருக்கு பதில் வனிதா விஜயகுமார் இனி ராதிகா கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எனினும் சீரியலை விட்டு விலகுவது குறித்து ரேஷ்மாவோ, சீரியலில் கமிட்டாவது குறித்து வனிதாவோ எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.