பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

விஜய் ஆண்டனி நடித்த ‛பிச்சைக்காரன்' படம் வரவேற்பை பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருவதோடு இயக்குனர் பொறுப்பையும் ஏற்றுள்ளார் விஜய் ஆண்டனி. இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் கடந்தவாரம் நடந்தது. அப்போது அங்கு நிகழ்ந்த விபத்தில் விஜய் ஆண்டனி காயமடைந்தார். அங்கு ஓரிரு நாள் சிகிச்சை பெற்றவர் அதன்பின் சென்னை வந்தார். தற்போது இங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்து வருகிறார். இதற்கிடையே இவரது உடல்நிலை பற்றி பல்வேறு விதமான தகவல்கள் பரவின.
இந்நிலையில் விஜய் ஆண்டனி தான் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் இருந்து கட்டை விரலை உயர்த்தி காட்டி ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛‛மலேசியாவில் நடந்த விபத்தில் தாடை, மூக்கில் காயம் ஏற்பட்டது. ஒரு பெரிய அறுவை சிகிச்சை முடிந்து, குணமாகி வருகிறேன். விரைவில் உங்களிடம் பேசுகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுக்கும், அக்கறைக்கும் நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.