பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
விக்ரம் படத்தை அடுத்து தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இதையடுத்து மணிரத்னம், பா.ரஞ்சித், எச்.வினோத் உட்பட பல இயக்குனர்களிடத்தில் கதை கேட்டுள்ளார். இதில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் அவரது 234வது படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் 7 மாநிலங்களைச் சார்ந்த பிரபல ஹீரோக்கள் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த பிரபல ஹீரோக்களில் ஏற்கனவே கமலுடன் ஹேராம் படத்தில் நடித்த ஷாருக்கானும் ஒருவர். அதோடு இந்த 7 மாநில ஹீரோக்களும் கெஸ்ட் ரோல்களில் நடிக்காமல் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்கிறார்கள். அந்த வகையில் கமலின் 234வது படம் ஒரு மெகா பான் இந்தியா படமாக உருவாக்கப் போகிறது. தற்போது இப்படத்தின் கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் மணிரத்னம்.