இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அவரது அண்ணன் செல்வராகவன் திரைக்கதை அமைத்தார். அதன் பிறகு தனுசை வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை , மயக்கம் என்ன, நானே வருவேன் படங்களை இயக்கினார். இவற்றில் 11 ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவனும், தனுசும் இணைந்த நானே வருவேன் படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படம் தோல்வி அடைந்து விட்டது. இதன் காரணமாக தற்போது சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் செல்வராகவன்.
இந்த நிலையில் வாத்தி படத்தை முடித்துவிட்டு கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அதன்பிறகு சேகர் கம்முலா இயக்கும் மூன்று மொழிப்படத்தில் நடிப்பவர், அதன்பிறகு மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடிக்கிறார். அதன்பின் செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்க போகிறாராம். இப்படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் செல்வராகவன். இந்த படம் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்படுகிறது.