பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அவரது அண்ணன் செல்வராகவன் திரைக்கதை அமைத்தார். அதன் பிறகு தனுசை வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை , மயக்கம் என்ன, நானே வருவேன் படங்களை இயக்கினார். இவற்றில் 11 ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவனும், தனுசும் இணைந்த நானே வருவேன் படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படம் தோல்வி அடைந்து விட்டது. இதன் காரணமாக தற்போது சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் செல்வராகவன்.
இந்த நிலையில் வாத்தி படத்தை முடித்துவிட்டு கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அதன்பிறகு சேகர் கம்முலா இயக்கும் மூன்று மொழிப்படத்தில் நடிப்பவர், அதன்பிறகு மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடிக்கிறார். அதன்பின் செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்க போகிறாராம். இப்படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் செல்வராகவன். இந்த படம் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்படுகிறது.