என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நடிகர் விமல் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இதற்கு பதலளிக்கும் வகையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் படத்தை வெளியிட்டு நான் நலமுடன் இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விமல் மதுவுக்கு அடிமையாகிவிட்டார் அதிலிருந்து மீள்வதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார் என்ற தகவல் வெளியானது. இதை தொடர்ந்து விமல் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் பேசியிருப்பதாவது: எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் பரவியது. அப்படி எதுவும் இல்லை. நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். இப்போதுகூட படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறேன். நான் மதுவுக்கு அடிமையாகிவிட்டதால் வீட்டிலேயே சிகிச்சை நடப்பதாக இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. இது சிரிப்பாகவும், காமெடியாகவும் இருக்கிறது. வேண்டாத விஷக்கிருமிகள் எனக்கு எதிராக இதை செய்கிறார்கள். அவர்கள் யார் என்பதும் எனக்குத் தெரியும். இந்த மாதிரியான சின்னபிள்ளைத்தனமாக வேலையை விட்டுவிட்டு உழைக்கிற வேலைய பாருங்கள், வாழவிடுங்கள், நீங்களும் வாழுங்கள். காயப்படுத்த நினைக்காதீர்கள்.
இவ்வாறு விமல் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.