ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவருடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அதோடு தமன்னா ஹீரோயினாக ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக கூறப்படும் நிலையில், ஏப்ரல் மாதத்தோடு படப்பிடிப்பை நடத்தி முடிக்கவும் இயக்குனர் நெல்சன் திட்டமிட்டு இருக்கிறார்.
அதோடு ஏப்ரலில் இசை வெளியீட்டு விழா நடத்துவதோடு, படத்தின் டீசரையும் வெளியிடுகிறார்கள். இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் ஒரு கெஸ்ட் ரோலிங் நடிப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அவர் நடிக்கும் படப்பிடிப்பு ஜனவரி 8-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் ஜெயிலர் பட வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.