‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

‛கனெக்ட்' படத்திற்கு பிறகு ஜவான், இறைவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா, அது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் சென்னை எழும்பூரில் சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு நேரில் சென்று புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பரிசு பொருட்களை வழங்கி இருக்கிறார்கள் நயன்தாரா. அப்போது அந்த பகுதியில் ஏராளமான மக்கள் கூடியதால் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து அனைத்து மக்களுக்கும் தான் கொண்டு சென்ற பரிசுப் பொருட்களை கொடுத்துவிட்டு அங்கிருந்து கணவருடன் திரும்பி இருக்கிறார் நயன்தாரா. இதுகுறித்து வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.




