ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

‛கனெக்ட்' படத்திற்கு பிறகு ஜவான், இறைவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா, அது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் சென்னை எழும்பூரில் சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு நேரில் சென்று புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பரிசு பொருட்களை வழங்கி இருக்கிறார்கள் நயன்தாரா. அப்போது அந்த பகுதியில் ஏராளமான மக்கள் கூடியதால் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து அனைத்து மக்களுக்கும் தான் கொண்டு சென்ற பரிசுப் பொருட்களை கொடுத்துவிட்டு அங்கிருந்து கணவருடன் திரும்பி இருக்கிறார் நயன்தாரா. இதுகுறித்து வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.




