மத்திய அமைச்சருக்கே இந்த நிலை என்றால் ? சுரேஷ்கோபி பட சென்சார் சர்ச்சை குறித்து மாநில அமைச்சர் காட்டம் | மீண்டும் துடிப்புடன் படப்பிடிப்புக்கு தயாரான மம்முட்டி | ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு |
சென்னையில் கடந்த ஒருவாரமாக நடந்து வந்த சர்வதேச திரைப்பட விழா நேற்று நிறைவடைந்தது. இந்த விழாவில் 51 நாடுகளை சேர்ந்த 102 படங்கள் திரையிடப்பட்டது. இந்த விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில் 30 படங்கள் போட்டியிட்டன. இதில் ஆதார், இரவின் நிழல், இறுதிப்பக்கம், மாமனிதன், கார்கி, கசடதபற, நட்சத்திரம் நகர்கிறது, கிடா, பிகினிங், கோட், பபூன், யுத்த காண்டம் ஆகிய 12 படங்கள் இறுதி சுற்றுக்கு தேர்வானது.
இதில் முதல்பரிசை பூ ராமு நடித்த 'கிடா'வும், இரண்டாவது பரிசை சிம்பு தேவன் இயக்கிய 'கசடதபற'வும் பெற்றன. சிறந்த நடிகருக்கான விருது நடிகர்கள் விஜய் சேதுபதி (மாமனிதன்), பூ ராமு (கிடா)ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. கார்கி படத்தில் நடித்த சாய்பல்லவி சிறந்த நடிகையாக அறிவி'கப்பட்டார். சிறப்பு நடுவர் விருது பார்த்திபன் இய'கிய 'இரவின் நிழல்'படத்துக்கும், சிறப்பு சான்றிதழ் விருது கருணாஸ் நடித் 'ஆதார்' படத்துக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த ஒலிப்பதிவாளர் அந்தோணி பிஜே ரூபன் (நட்சத்திரம் நகர்கிறது), சிறந்த படத்தொகுப்பாளர் சிஎஸ் பிரேம் (பிகினிங்), ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் (இரவின் நிழல்), ஆகியோருக்கு வழங்கப்பட்டன. நேற்று நடந்த நிறைவு விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. கே.பாக்யராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். சாய்பல்லவி விருதினை பெற வரவில்லை. வாழ்நாள் சாதனையாளர் விருது பாரதிராஜாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் விழாவுக்கு வரவில்லை. அந்த விருது பின்னர் அவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.