மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
திரில்லர் மற்றும் துப்பறியும் கதைகளை இயக்குவதில் வல்லவரான இயக்குனர் அறிவழகன் சமீபகாலமாக நடிகர் அருண்விஜய் வைத்து தொடர்ந்து படங்களை இயக்கி வந்தார். இந்தநிலையில் தற்போது சபதம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக ஆதி நடிக்கிறார்.
கடந்த பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஈரம் படத்தில் இயக்குனராக அறிமுகமான அறிவழகன், அந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆதிக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை பெற்றுத் தந்தார். இந்த நிலையில் தற்போது சபதம் படத்திற்காக இவர்கள் இணைந்து உள்ளனர். இந்தப்படத்தின் துவக்க விழா பூஜை நேற்று நடைபெற்றது.
அதுமட்டுமல்ல ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமனும் இந்த சபதம் படத்திற்காக இவர்களுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்தப் படத்தின் கதைக்கு ஆதி தான் சரியான நபராக இருந்தார்.. அருண்விஜய்க்கு அடுத்ததாக ஆதியுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு ரொம்பவே வசதியாக இருக்கிறது என்று கூறியுள்ளார் அறிவழகன். இந்த படம் ஹாரர் திரில்லர் ஆக உருவாகிறது.