ஜப்பான் ரசிகர்கள் ரசித்து மகிழும் 'விக்ரம்' | விடியற்காலையில் நடந்த அகில் அக்கினேனி திருமணம் | தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் |
ஜி.வி.பிரகாஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் ஒரு படத்தில் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் என்பவர் இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கதையின் நாயகியாக நடித்துவரும் மாணிக் என்ற படத்தை தமிழ், ஹிந்தியில் தயாரித்து வரும் நட்மெக் புரடொக்சன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம்தான் மலையாளத்தில் அமலாபால் நடித்து வெளியான தி டீச்சர் என்ற படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமாரே இசையமைக்கும் இந்த படத்தில் தலைவாசல் விஜய், காளி வெங்கட், இளவரசி ரோஹினி உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பொழுதுபோக்கு நிறைந்த குடும்ப படமாக தயாராகிறது.