ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

காஞ்சனா- 3 படத்தை அடுத்து ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி- 2, துர்கா என ராகவா லாரன்ஸின் கைவசம் நான்கு படங்கள் உள்ளன. இதில் ருத்ரன் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சந்திரமுகி- 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்ததும் வெற்றிமாறன் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கும் அதிகாரம் என்ற படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அதிகாரம் படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக நயன்தாராவின் 81 வது படத்தை துரை செந்தில்குமார் இயக்க இருப்பதோடு, ராகவா லாரன்ஸும் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இந்த அதிகாரம் படம் ட்ராப் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.