ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
காஞ்சனா- 3 படத்தை அடுத்து ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி- 2, துர்கா என ராகவா லாரன்ஸின் கைவசம் நான்கு படங்கள் உள்ளன. இதில் ருத்ரன் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சந்திரமுகி- 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்ததும் வெற்றிமாறன் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கும் அதிகாரம் என்ற படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அதிகாரம் படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக நயன்தாராவின் 81 வது படத்தை துரை செந்தில்குமார் இயக்க இருப்பதோடு, ராகவா லாரன்ஸும் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இந்த அதிகாரம் படம் ட்ராப் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.