ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

காஞ்சனா- 3 படத்தை அடுத்து ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி- 2, துர்கா என ராகவா லாரன்ஸின் கைவசம் நான்கு படங்கள் உள்ளன. இதில் ருத்ரன் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சந்திரமுகி- 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்ததும் வெற்றிமாறன் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கும் அதிகாரம் என்ற படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அதிகாரம் படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக நயன்தாராவின் 81 வது படத்தை துரை செந்தில்குமார் இயக்க இருப்பதோடு, ராகவா லாரன்ஸும் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இந்த அதிகாரம் படம் ட்ராப் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.




