சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தமிழ் திரையுலகில் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட காதல் ஜோடியான விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரின் திருமணம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் அதாவது இவர்கள் திருமணம் நடைபெற்று நான்கு மாதங்கள் முடிந்த நிலையிலேயே தாங்கள் இரட்டைகுழந்தை பெற்றுள்ளதாக நயன்-விக்கி தம்பதியினர் அறிவித்து பரபரப்பை கிளப்பினர். ஒரு பக்கம் இதுபற்றி சில விமர்சனங்கள் எழுந்தாலும் பெரும்பாலானோர் அவர்களின் இந்த முடிவை பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை ராதிகா அவர்கள் வீட்டிற்கு நேரிலேயே சென்று இரட்டை குழந்தைகளை பார்த்துவிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு வந்துள்ளார். அந்த சந்திப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரின் காதலுக்கு அச்சாரம் போட்ட நானும் ரவுடி தான் படத்தில், இவர்கள் இணைந்து பணியாற்றிய போது, அந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ராதிகாவும் நடித்திருந்தார். இந்தநிலையில் தான் இவர்கள் வீட்டிற்கு அதிக உரிமையுடன் சென்று குழந்தைகளை பார்த்து விட்டு வந்துள்ளார் ராதிகா.