என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தமிழ் திரையுலகில் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட காதல் ஜோடியான விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரின் திருமணம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் அதாவது இவர்கள் திருமணம் நடைபெற்று நான்கு மாதங்கள் முடிந்த நிலையிலேயே தாங்கள் இரட்டைகுழந்தை பெற்றுள்ளதாக நயன்-விக்கி தம்பதியினர் அறிவித்து பரபரப்பை கிளப்பினர். ஒரு பக்கம் இதுபற்றி சில விமர்சனங்கள் எழுந்தாலும் பெரும்பாலானோர் அவர்களின் இந்த முடிவை பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை ராதிகா அவர்கள் வீட்டிற்கு நேரிலேயே சென்று இரட்டை குழந்தைகளை பார்த்துவிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு வந்துள்ளார். அந்த சந்திப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரின் காதலுக்கு அச்சாரம் போட்ட நானும் ரவுடி தான் படத்தில், இவர்கள் இணைந்து பணியாற்றிய போது, அந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ராதிகாவும் நடித்திருந்தார். இந்தநிலையில் தான் இவர்கள் வீட்டிற்கு அதிக உரிமையுடன் சென்று குழந்தைகளை பார்த்து விட்டு வந்துள்ளார் ராதிகா.