2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் |
தமிழ் திரையுலகில் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட காதல் ஜோடியான விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரின் திருமணம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் அதாவது இவர்கள் திருமணம் நடைபெற்று நான்கு மாதங்கள் முடிந்த நிலையிலேயே தாங்கள் இரட்டைகுழந்தை பெற்றுள்ளதாக நயன்-விக்கி தம்பதியினர் அறிவித்து பரபரப்பை கிளப்பினர். ஒரு பக்கம் இதுபற்றி சில விமர்சனங்கள் எழுந்தாலும் பெரும்பாலானோர் அவர்களின் இந்த முடிவை பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை ராதிகா அவர்கள் வீட்டிற்கு நேரிலேயே சென்று இரட்டை குழந்தைகளை பார்த்துவிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு வந்துள்ளார். அந்த சந்திப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரின் காதலுக்கு அச்சாரம் போட்ட நானும் ரவுடி தான் படத்தில், இவர்கள் இணைந்து பணியாற்றிய போது, அந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ராதிகாவும் நடித்திருந்தார். இந்தநிலையில் தான் இவர்கள் வீட்டிற்கு அதிக உரிமையுடன் சென்று குழந்தைகளை பார்த்து விட்டு வந்துள்ளார் ராதிகா.