மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழ் திரையுலகில் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட காதல் ஜோடியான விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரின் திருமணம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் அதாவது இவர்கள் திருமணம் நடைபெற்று நான்கு மாதங்கள் முடிந்த நிலையிலேயே தாங்கள் இரட்டைகுழந்தை பெற்றுள்ளதாக நயன்-விக்கி தம்பதியினர் அறிவித்து பரபரப்பை கிளப்பினர். ஒரு பக்கம் இதுபற்றி சில விமர்சனங்கள் எழுந்தாலும் பெரும்பாலானோர் அவர்களின் இந்த முடிவை பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை ராதிகா அவர்கள் வீட்டிற்கு நேரிலேயே சென்று இரட்டை குழந்தைகளை பார்த்துவிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு வந்துள்ளார். அந்த சந்திப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரின் காதலுக்கு அச்சாரம் போட்ட நானும் ரவுடி தான் படத்தில், இவர்கள் இணைந்து பணியாற்றிய போது, அந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ராதிகாவும் நடித்திருந்தார். இந்தநிலையில் தான் இவர்கள் வீட்டிற்கு அதிக உரிமையுடன் சென்று குழந்தைகளை பார்த்து விட்டு வந்துள்ளார் ராதிகா.