ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
வினோத் இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக நடித்துள்ள ‛துணிவு' படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. வங்கி கொள்ளை தொடர்பான கதையில் அதிரடி ஆக் ஷன் படமாக தயாராகி உள்ளது. இந்த படத்துடன் விஜய்யின் வாரிசு படமும் வெளியாகிறது. இரண்டு படங்களுக்கு இடையே தியேட்டர்களை பிடிப்பதில் போட்டா போட்டி நடக்கிறது. மேலும் அன்றைய தினம் இரண்டு படத்திற்கும் எந்த மாதிரியான விமர்சனங்கள் வரப்போகிறது என இரு தரப்பு ரசிகர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் சமூகவலைதளங்களில் அவ்வப்போது இரு ரசிகர்கள் இடையே சண்டைகளும் நடந்து வருகின்றன.
நடிகர் அஜித் தன் பட சம்பந்தப்பட்ட எந்த விழாக்களிலும் பங்கேற்க மாட்டார். வேறு எந்தவொரு விஷயத்திற்கும் குரல் கொடுக்காதவர். தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர். அவ்வப்போது உத்வேகம் தரக்கூடிய செய்திகளை தனது மேலாளர் வாயிலாக அஜித் பகிர்ந்து வருகிறார். தற்போது அப்படி ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அஜித் சொன்னதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட பதிவு : ‛‛உங்களை சுற்றி எப்போதும் உங்களைச் சிறப்பாகச் செய்யத் தூண்டும் நபர்களையே வையுங்கள். நாடகத்திற்கோ, எதிர்மறைக்கோ இடமில்லை. உயர்ந்த இலக்குகள் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு நல்ல நேரமும், நேர்மறையான எனர்ஜியும் வேண்டும். பொறாமை, வெறுப்பிற்கு இடமில்லை. ஒருவருக்கு ஒருவர் சிறந்த விஷயத்தை வெளி கொண்டு வர வேண்டும். வாழு... வாழ விடு... அன்புடன் அஜித்குமார்'' என கூறியுள்ளார்.
இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.