அரசியலில் ஜீரோ-வைக் கண்டுபிடித்த பவன் கல்யாண் : ராம் கோபால் வர்மா காட்டம் | மூன்று மொழிகளில் உருவாகும் தனுஷின் 51வது படம் | வசூலை குவிக்கும் அனிமல் : ரன்பீர் கபூருக்கு முதல் ரூ.500 கோடி படம் | கன்னடத்தில் அறிமுகமாகும் சாய் பல்லவி : யஷ் ஜோடி ஆகிறார் | பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதற்காக வருந்த மாட்டேன் : வனிதா மகள் கடிதம் | மம்முட்டி படத்துக்கு திடீர் எதிர்ப்பு | வாங்கிய அடி, உதை, காயங்கள் எல்லாமே நிஜம் : கல்யாணி பிரியதர்ஷன் நெகிழ்ச்சி | நடிகர் ரஹ்மானின் மகள் திருமணத்திற்காக ஒன்றுகூடிய 80ஸ் நட்சத்திரங்கள் | ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாத போது, பேஷன் ஷோ எதுக்கு? - பார்த்திபன் | அரசாங்கம் எங்கே ? : அதிதி பாலன் கேள்வி |
தமிழ், தெலுங்கில் தனி கதாநாயகிகளாக ஒரு சில நடிகைகள்தான் நடித்து வருகிறார்கள். அதிலும் சில முன்னணி நடிகைகளுக்கு மட்டும்தான் வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைக்கிறது. தமிழில் தனி கதாநாயகியாக நடித்தாலும் முன்னணியில் இருப்பவர் நயன்தாரா. தெலுங்கில் அப்படி தனி கதாநாயகிகளின் படங்கள் அதிகம் வருவதில்லை.
சமந்தா நடித்து தெலுங்கில் தயாரான 'யசோதா' படம் தமிழிலும் டப்பிங் ஆகி இரண்டு தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. புதிய கதைக்களம், சமந்தா கதாபாத்திரத்தின் சஸ்பென்ஸ், அவரது நடிப்பு என படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள ஒரு படமாக அமைந்துவிட்டது. தமிழகத்தில் மழை காரணமாக வசூல் பாதிக்கப்பட்டாலும் விமர்சனங்கள் பாசிட்டிவ்வாக வந்துள்ளன. அதே சமயம், ஆந்திரா, தெலுங்கானாவில் படம் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபீசில் படம் வெற்றி பெற்றுவிடும் என்று பேசிக் கொள்கிறார்கள்.
சமந்தா தனி கதாநாயகியாக நடித்த முதல் படமான 'யு டர்ன்' தமிழ், தெலுங்கில் இரு மொழிப் படமாக வெளிவந்தாலும் தோல்வியைத் தழுவியது. அடுத்து அவர் தனி கதாநாயகியாக நடித்து வெளிவந்த தெலுங்குப் படமான 'ஓ பேபி' வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. மூன்று வருடங்களுக்குப் பிறகு சமந்தா மீண்டும் தனி கதாநாயகியாக நடித்து வெளிவந்துள்ள 'யசோதா' படமும் வெற்றிப் படமாக அமைய உள்ளது.