நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவருடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உட்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் பல இடங்களில் நடைபெற்று வந்த நிலையில், இதுவரை 50 சதவீதம் படப்பிடிப்பு நடைபெற்று விட்டதாக இயக்குனர் நெல்சன் ஒரு தகவல் கொடுத்து இருக்கிறார்.
அதோடு இதற்கு முன்பு தான் இயக்கிய படங்களை விட இந்த படத்தில் அதிரடியான ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், அந்த படங்களை விட இந்த படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ள நெல்சன், இந்த ஜெயிலர் படத்தில் இதுவரை பார்த்திராத வித்தியாசமான ரஜினியை பார்க்கலாம் . அதேபோல் கதைக்களமும் வித்தியாசமாகவும் சீன் பை சீன் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்க வகையிலும் திரைக்கதை அமைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் ஜெயிலர் படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடுவதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் இயக்குனர் நெல்சன்.