ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவருடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உட்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் பல இடங்களில் நடைபெற்று வந்த நிலையில், இதுவரை 50 சதவீதம் படப்பிடிப்பு நடைபெற்று விட்டதாக இயக்குனர் நெல்சன் ஒரு தகவல் கொடுத்து இருக்கிறார்.
அதோடு இதற்கு முன்பு தான் இயக்கிய படங்களை விட இந்த படத்தில் அதிரடியான ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், அந்த படங்களை விட இந்த படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ள நெல்சன், இந்த ஜெயிலர் படத்தில் இதுவரை பார்த்திராத வித்தியாசமான ரஜினியை பார்க்கலாம் . அதேபோல் கதைக்களமும் வித்தியாசமாகவும் சீன் பை சீன் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்க வகையிலும் திரைக்கதை அமைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் ஜெயிலர் படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடுவதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் இயக்குனர் நெல்சன்.