தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பீஸ்ட், ஆச்சார்யா படங்களைத் தொடர்ந்து தற்போது ஹிந்தி, தெலுங்கில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. ஹிந்தியில் சல்மான்கான் உடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது பூஜா ஹெக்டே காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்றைய தினம் தனது காலில் அணிந்திருந்த ஸ்பிலின்டை நீக்கிவிட்டு சோபாவில் அமர்ந்தபடி ஒரு வாளியில் வைக்கப்பட்ட தண்ணீரில் தனது காலை வைத்தபடி தான் சோபாவில் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் பூஜாஹெக்டே. அதோடு இந்த விபத்துக்கு பிறகு தினமும் என்னுடைய காலை இப்படித்தான் விடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பூஜா ஹெக்டேவுக்கு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக சல்மான்கான் உடன் நடித்து வரும் கிசிக்கா பாய் கிசிக்கா ஜான் மற்றும் தெலுங்கில் திரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பை பூஜா ஹெக்டே அல்லாத மற்ற நடிகர் நடிகைகளை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.