அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் | கதை திருடும் சினிமா இயக்குனர்கள்: எழுத்தாளர் ஆர்னிகா நாசர் ஆவேசம் |
பீஸ்ட், ஆச்சார்யா படங்களைத் தொடர்ந்து தற்போது ஹிந்தி, தெலுங்கில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. ஹிந்தியில் சல்மான்கான் உடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது பூஜா ஹெக்டே காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்றைய தினம் தனது காலில் அணிந்திருந்த ஸ்பிலின்டை நீக்கிவிட்டு சோபாவில் அமர்ந்தபடி ஒரு வாளியில் வைக்கப்பட்ட தண்ணீரில் தனது காலை வைத்தபடி தான் சோபாவில் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் பூஜாஹெக்டே. அதோடு இந்த விபத்துக்கு பிறகு தினமும் என்னுடைய காலை இப்படித்தான் விடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பூஜா ஹெக்டேவுக்கு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக சல்மான்கான் உடன் நடித்து வரும் கிசிக்கா பாய் கிசிக்கா ஜான் மற்றும் தெலுங்கில் திரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பை பூஜா ஹெக்டே அல்லாத மற்ற நடிகர் நடிகைகளை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.