ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | தக்லைப் படத்திலிருந்து மீண்டும் விலகினாரா ஜெயம் ரவி? | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் |
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலின் அடிப்படையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை தயாரித்த லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கப்பட்டது. இன்று மாலை இயக்குனர் மணிரத்னமும் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரனும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை அலுவலகத்துக்கு நேரில் சென்று அமரர் கல்கியின் மகன் கல்கி ராஜேந்திரனைச் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது கல்கி ராஜேந்திரன் தன் தந்தையின் பெயரில் நடத்தி வரும் கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளைக்கு மனிரத்தினம் மற்றும் சுபாஷ்கரன் இருவரும் ரூ.1 கோடிக்கான காசோலையை நன்கொடையாக வழங்கினர்.