Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காந்தாரா படத்தில் புனீத் ராஜ்குமார் நடிக்க விரும்பினார் : ரிஷப் ஷெட்டி

04 நவ, 2022 - 12:54 IST
எழுத்தின் அளவு:
Puneeth-Rajkumar-likes-to-act-in-Kantara-movie-says-Rishab-shetty

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த பிரபல நடிகர் புனீத் ராஜ்குமார், கடந்த வருடம் திடீர் மாரடைப்பால் காலமானார். அவர் இறந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் அவருக்கு கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா என்ற விருது வழங்கப்பட்டது.

இந்தநிலையில் பலரும் அவருடனான தங்களது நினைவுகளை மீண்டும் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி கன்னடத்தில் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பையும், வசூலையும் பெற்ற படம் காந்தாரா. இந்த படத்தின் நாயகனும், இயக்குனருமான ரிஷப் ஷெட்டி கூறும்போது புனீத் ராஜ்குமார் காந்தாரா படத்தில் நடிக்க விரும்பினார் என்கிற புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தின் கதையை தயார் செய்ததும் புனீத் ராஜ்குமாருடன் கூறினேன். இதைக்கேட்டு முடித்ததுமே இந்த படத்தில் கட்டாயம் நான் நடிக்கிறேன் என்று கூறினார். அந்த அளவிற்கு இந்த கதை அவரை ஈர்த்து இருந்தது. ஆனால் அடுத்தடுத்த படங்களில் அவர் பிசியாக இருந்தார். ஒருமுறை என்னை நேரில் அழைத்து நான் இந்த படத்தை பண்ண வேண்டுமென்றால் இன்னும் சில நாட்கள் காலதாமதமாகும் போல தெரிகிறது. அதனால் இந்தப் படத்தில் நீயே நடித்துவிடு.. எனக்காக காத்திருக்க வேண்டாம் என்று கூறினார்.

இந்த கதை எழுதிய போது நானே இதில் நடிக்க விருப்பம் இருந்தாலும் புனீத் ராஜ்குமார் இதில் நடிக்கும்போது இன்னும் இந்த படம் சிறப்பாக வரும் என்கிற எண்ணத்தில்தான் அவரிடம் இந்த கதையை நான் கூறினேன். பின்னர் அவரே அப்படி கூறியதும் இந்த படத்தில் நானே நடிக்கத் தொடங்கி படப்பிடிப்பை நடத்தி வந்தேன். கடந்த வருடம் அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கலந்து கொண்ட ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கூட என்னை பார்த்ததும் படம் எந்த அளவிற்கு வந்திருக்கிறது என்று அக்கறையுடன் விசாரித்தார். அவர் இந்த படத்தில் நடித்து இருந்தால் அது இன்னும் இந்த படத்திற்கு கூடுதல் சிறப்பம்சமாக அமைந்திருக்கும்” என்று நெகிழ்வுடன் கூறியுள்ளார் ரிஷப் ஷெட்டி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காதலரின் முதல் திருமணத்தில் பங்கேற்ற ஹன்சிகா : வைரலாகும் வீடியோகாதலரின் முதல் திருமணத்தில் ... மீண்டும் ஹிந்தியில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் ஹிந்தியில் நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in