டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

மலையாளத்தில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு பஹத் பாசில் ஜோடியாக மஹேஷிண்டே பிரதிகாரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்த பிறகு சினிமாவில் தனது எல்லையை விரிவாக்கி வருகிறார் அபர்ணா பாலமுரளி. அந்தவகையில் கன்னடத்தில் பஹத் பாசிலுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கன்னட நடிகரும் இயக்குனருமான ராஜ் பி ஷெட்டி முதன் முறையாக மலையாளத்தில் நடிக்கும் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறார் அபர்ணா பாலமுரளி.
இந்த படத்திற்கு ருத்திரம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. “கோடாரி மறந்துவிடும் மரம் மறக்காது” என்கிற இதன் டேக்லைனே இந்த படம் ஒரு ரிவெஞ்ச் திரில்லர் என்பதை பளிச்சென சொல்கிறது. இந்த படத்தை மலையாள இயக்குனர் ஜிஷோ லோன் ஆண்டனி என்பவர் இயக்குகிறார். மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் நான்கிலும் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2023ல் துவங்க இருக்கிறது என அபர்ணா பாலமுரளி தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.