மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |
மலையாளத்தில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு பஹத் பாசில் ஜோடியாக மஹேஷிண்டே பிரதிகாரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்த பிறகு சினிமாவில் தனது எல்லையை விரிவாக்கி வருகிறார் அபர்ணா பாலமுரளி. அந்தவகையில் கன்னடத்தில் பஹத் பாசிலுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கன்னட நடிகரும் இயக்குனருமான ராஜ் பி ஷெட்டி முதன் முறையாக மலையாளத்தில் நடிக்கும் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறார் அபர்ணா பாலமுரளி.
இந்த படத்திற்கு ருத்திரம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. “கோடாரி மறந்துவிடும் மரம் மறக்காது” என்கிற இதன் டேக்லைனே இந்த படம் ஒரு ரிவெஞ்ச் திரில்லர் என்பதை பளிச்சென சொல்கிறது. இந்த படத்தை மலையாள இயக்குனர் ஜிஷோ லோன் ஆண்டனி என்பவர் இயக்குகிறார். மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் நான்கிலும் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2023ல் துவங்க இருக்கிறது என அபர்ணா பாலமுரளி தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.