விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
மலையாளத்தில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு பஹத் பாசில் ஜோடியாக மஹேஷிண்டே பிரதிகாரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்த பிறகு சினிமாவில் தனது எல்லையை விரிவாக்கி வருகிறார் அபர்ணா பாலமுரளி. அந்தவகையில் கன்னடத்தில் பஹத் பாசிலுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கன்னட நடிகரும் இயக்குனருமான ராஜ் பி ஷெட்டி முதன் முறையாக மலையாளத்தில் நடிக்கும் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறார் அபர்ணா பாலமுரளி.
இந்த படத்திற்கு ருத்திரம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. “கோடாரி மறந்துவிடும் மரம் மறக்காது” என்கிற இதன் டேக்லைனே இந்த படம் ஒரு ரிவெஞ்ச் திரில்லர் என்பதை பளிச்சென சொல்கிறது. இந்த படத்தை மலையாள இயக்குனர் ஜிஷோ லோன் ஆண்டனி என்பவர் இயக்குகிறார். மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் நான்கிலும் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2023ல் துவங்க இருக்கிறது என அபர்ணா பாலமுரளி தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.