அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் |

2006ம் ஆண்டு சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலுவின் இரட்டை வேடத்தில் வெளியானது 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' . பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் வடிவேலு கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. இந்த படத்தை தயாரித்த இயக்குனர் ஷங்கர் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க விரும்பினார். அதன்படி அந்த பணிகள் தொடங்கியது. ஆனால் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இயக்குனர் சிம்பு தேவனுக்கும், வடிவேலுவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படம் பாதியில் நின்றது. இதனால் பெரிய நஷ்டத்தை சந்தித்த ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்க. தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவுக்கு ரெட் கார்ட் போட்டது.
பல வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்து விட்டார் வடிவேலு. இது ஒருபுறமிருக்க இம்சை அரசன் படம் பெற்றி பெற்றதற்கு அதன் கதை மற்றும் இயக்குனரும் ஒரு காரணம். அதை நிரூபிக்கும் விதமாக அதேபோன்ற ஒரு காமெடி சரித்திர கதையை யோகிபாபுவை வைத்து இயக்க முடிவு செய்திருக்கிறார் சிம்புதேவன். அண்மையில் யோகி பாபுவை சந்தித்து படத்தின் கதையை சொல்லி ஒப்புதலும் வாங்கியிருக்கிறார்.