எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
2006ம் ஆண்டு சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலுவின் இரட்டை வேடத்தில் வெளியானது 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' . பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் வடிவேலு கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. இந்த படத்தை தயாரித்த இயக்குனர் ஷங்கர் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க விரும்பினார். அதன்படி அந்த பணிகள் தொடங்கியது. ஆனால் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இயக்குனர் சிம்பு தேவனுக்கும், வடிவேலுவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படம் பாதியில் நின்றது. இதனால் பெரிய நஷ்டத்தை சந்தித்த ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்க. தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவுக்கு ரெட் கார்ட் போட்டது.
பல வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்து விட்டார் வடிவேலு. இது ஒருபுறமிருக்க இம்சை அரசன் படம் பெற்றி பெற்றதற்கு அதன் கதை மற்றும் இயக்குனரும் ஒரு காரணம். அதை நிரூபிக்கும் விதமாக அதேபோன்ற ஒரு காமெடி சரித்திர கதையை யோகிபாபுவை வைத்து இயக்க முடிவு செய்திருக்கிறார் சிம்புதேவன். அண்மையில் யோகி பாபுவை சந்தித்து படத்தின் கதையை சொல்லி ஒப்புதலும் வாங்கியிருக்கிறார்.