கமல் சாரை பற்றி தப்பா பேசாதீங்க! - சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார் | கார்த்தியின் 'கைதி- 2' படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது! | அபிஷன் ஜீவிந்த் மூலம் எனக்கு கிடைத்த புகழ்! - சசிகுமார் நெகிழ்ச்சி | சூர்யா 45வது படம் பண்டிகை நாளில் வெளியாகும்! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் | பெங்களூரு காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது புகார்! வழக்கை பதிவு செய்யாத போலீசார் | 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? | எப்போதான் முடியும் ரவிமோகன் - ஆர்த்தி சண்டை? | 'தக்லைப்' படத்தில் போலீசாக வருகிறாரா திரிஷா? |
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து, அந்த படத்தில் விஜய்சேதுபதி செய்யும் ஒரு காமெடி காட்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காயத்ரி. ஆனால் அதைத்தொடர்ந்து அவருக்கு விஜய்சேதுபதியின் படங்களில் மட்டுமே நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து வந்தது. சில விழா மேடைகளில் கூட தமிழ் நடிகையான தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என அவர் ஒரு குறைபட்டுக் கொண்டதையும் காண முடிந்தது.
ஆனால் சூழல் அப்படியே மாறி தற்போது சினிமாவில் ஏறுமுகத்தில் இருக்கிறார் காயத்ரி. இந்த வருடம் அவர் நடித்த மாமனிதன் திரைப்படம் விமர்சனரீதியாக பாராட்டப்பட்டது.. பல சர்வதேச விருதுகளை வென்றது. கமல், பஹத் பாசில் விஜய்சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மலையாளத்தில் குஞ்சாக்கோ போனுக்கு ஜோடியாக காயத்ரி நடித்த 'என்னா தான் கேஸ் கொடு' என்கிற படமும் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த வகையில் தற்போது தான் காயத்ரியின் மார்க்கெட் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
இந்த நிலையில் மலையாள சினிமாவின் பிரபல இயக்குனரான பிரியதர்ஷன், தான் அடுத்ததாக மலையாளத்தில் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக காயத்ரி தான் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் கதாநாயகர்களாக அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தும் இளம் நடிகர்கள் ஷேன் நிகம் மற்றும் ஷைன் டாம் சாக்கோ இருவரும் நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் பிரியதர்ஷனே தனது போர் பிரேம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்..